யாரை பிடிப்பது ? எப்படி  பிடிப்பது ...?  ஊழியர்கள் இல்லாமல் திணறுது வருமானவரித்துறை....!!!

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 06:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
யாரை பிடிப்பது ? எப்படி  பிடிப்பது ...?  ஊழியர்கள் இல்லாமல் திணறுது வருமானவரித்துறை....!!!

சுருக்கம்

யாரை பிடிப்பது ? எப்படி  பிடிப்பது ...?  ஊழியர்கள் இல்லாமல் திணறுது வருமானவரித்துறை....!!!

கருப்பு  பணத்தை  ஒழிக்கும் பொருட்டு ,  பழைய  500  மற்றும் 1000  ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என அறிவிக்கப்பட்ட  பின்பு,  பல  நெருக்கடிகளை  மக்கள்  தினம்  தினம் சந்தித்து வருகின்றனர்.

 இதன் தொடர்ச்சியாக ,  மக்கள் கையில்  இருந்த பணத்தை   எல்லாம்  வங்கி கணக்கில்   செலுத்தினர். அதுவும் கூட  ஒருவரின்  வங்கி கணக்கில்  இரண்டரை  லட்சத்திற்கு   மிகாமல் இருக்க  வேண்டும் என்றும்,  அதற்கு  மேல்  இருந்தால் ,  அதற்குண்டான  வரி  மற்றும்  கணக்கு  காட்ட  வேண்டும் என்பதால்,  பல  பண  முதலைகள் ,  பணம்  இல்லாத ஏழை மக்களின் வங்கி கணக்கை  குறி வைத்து, அதில் டெபாசிட்  செய்தும், ஒரு  சிலர்   கமிஷன்  வாங்கிகொண்டு,  கருப்புன் பணத்தை  வெள்ளையாக்கும்    முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர்.

இதை எல்லாம்  அறிந்தும் ,  இது போன்ற செயல்களில்  ஈடுபடுபவர்கள்  மீது தக்க  நடவடிக்கை  எடுக்கவும், மேற்கொண்டு  விசாரணை  மேற்கொள்ளவும்  , போதுமான  ஊழியர்கள் வருமான  வரித்துறையில்  இல்லை  எனவும் , எனவே,  போதுமான ஊழியர்களை  நியமித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்த   வேண்டும்  என , வருமான வரி ஊழியர் கூட்டமைப்பு மற்றும் வருமான வரித்துறை கெசட் அதிகாரிகள் சங்கம் இணைந்து  மத்திய  அரசுக்கு ( பிரதமர் ) கடிதம் எழுதப்பட்டுள்ளது .

வருமான வரித்துறையில்  தற்போது 30 - 35 % பணியிடங்கள்  காலியாக  உள்ளது  குறிப்பிடத்தக்கது. 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அப்டேட்.. பட்ஜெட்டில் கிடைத்த சிக்னல்.. என்ன தெரியுமா?
ஒருமுறை சார்ஜில் 169 கிமீ போகலாம்.. பேமிலிஸ் கொண்டாடும் யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?