ஒரே அடியாக 30 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..! "அய்யோ.. அம்மா" என கதறும் மக்கள்..!

Published : Sep 04, 2019, 12:35 PM IST
ஒரே அடியாக 30 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..! "அய்யோ.. அம்மா" என கதறும் மக்கள்..!

சுருக்கம்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு சவரன் தங்கம் விலை 26 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டு வந்தது. 

ஒரே அடியாக 30 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..! "அய்யோ.. அம்மா" என கதறும் மக்கள்..! 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு பின்பு இதுநாள்வரை 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்து உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு சவரன் தங்கம் விலை 26 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பெரும் அதிர்ச்சி தரும் விதமாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.அதன்படி இன்று 30 ஆயிரத்தை கடந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து 3765 ரூபாயாகவும், சவரனுக்கு  288 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 2.60 ரூபாய்  உயர்ந்து  55.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு கூட ஒரு கிராம்  தங்கம் வாங்கவும் யோசிக்கின்றனர்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வைத்துள்ள பெற்றோர்கள் தொடர் தங்கம் விலை உயர்வு காரணமாக பெரும் சிரமத்திற்கும் ஆளாகி உள்ளனர்.  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரூ.10,000 முதலீட்டில் மாதம் ரூ.30,000 வருமானம்! பாரம்பரிய அரிசி விற்பனையில் அட்டகாசமான லாப வாய்ப்பு!
Gold Rate Today (December 12): தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்.! விலையை கேட்டு இல்லத்தரசிகள் மயக்கம்.!