எல்ஐசி, சன் டிவி பங்குகளை வாங்கலாமா?

Published : Feb 10, 2025, 07:08 PM IST
எல்ஐசி, சன் டிவி பங்குகளை வாங்கலாமா?

சுருக்கம்

சந்தை சரிவின் போதும், நிபுணர்கள் மூன்று பங்குகளில் முதலீடு செய்ய பரிந்துரைத்துள்ளனர். இந்தப் பங்குகள் நல்ல வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பங்குகள் தற்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன. 

LIC and Sun TV Shares to buy : பங்குச் சந்தை பிப்ரவரி 10, திங்கட்கிழமை மீண்டும் சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ்-நிஃப்டியில் பெரிய சரிவு காணப்பட்டது. பல பெரிய பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதற்கிடையில், சந்தை ஆய்வாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் மூன்று பங்குகளை வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்தப் பங்குகளில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பங்குகள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடும். மூன்று பங்குகளும் குறைந்த விலையில் கிடைக்கின்றன, மேலும் அவற்றின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று கணித்துள்ளனர். 

1. ஷோபா பங்கு விலை இலக்கு 

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஷோபா லிமிடெட், கடந்த வாரம் தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதன் நிகர லாபம் சுமார் 44% மற்றும் வருவாய் 76% அதிகரித்துள்ளது. சிறப்பான முடிவுகளுக்குப் பிறகு, சந்தை கணிப்பு நிறுவனமான இலாரா கேபிடல் இந்தப் பங்கை வாங்குவதற்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இலக்கு விலையை ரூ.2,400 என நிர்ணயித்துள்ளது, இது தற்போதைய விலையான (ஷோபா பங்கு விலை) ரூ.1,197 ஐ விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். பிப்ரவரி 10, திங்கட்கிழமை, இந்தப் பங்கில் 7% வரை சரிவு ஏற்பட்டது. நுவாமா இன்ஸ்டிடியூஷனல் என்ற சந்தை கணிப்பு நிறுவனமும் இந்தப் பங்கை வாங்க பரிந்துரைத்துள்ளது. அதன் இலக்கு விலையாக ரூ.2,100 நிர்ணயித்துள்ளது. இந்தப் பங்கின் இதுவரை உயர்வு விலை ரூ.2,180. அதன் 52 வார குறைந்த விலை ரூ.1,110. தற்போது இந்தப் பங்கு சுமார் 45 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கிறது.

ஷோபா லிமிடெட் பங்கில் ஏன் வளர்ச்சி ஏற்படும் 

ஷோபா லிமிடெட் மும்பை, கிரேடர் நொய்டா, ஓசூர் ஆகிய நகரங்களிலும் ரியல் எஸ்டேட்டில் நுழைந்துள்ளது என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து, ரூ.1,256.87 கோடியாக அதிகரித்துள்ளது. சமீபத்திய நிறுவனத்தின் தாக்கல் படி, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.713.74 கோடியிலிருந்து இது கணிசமான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இத்துடன் பெரிய நகரங்களில் முதலீடுகளை செய்ய தயாராகி வருவதால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரூ.1க்குக் கீழே உள்ள பங்குகள்.. அதிக வருமானம் கொட்டுது!

2. LIC பங்கு விலை இலக்கு 

காப்பீட்டுத் துறை அரசு நிறுவனமான LIC இன் டிசம்பர் காலாண்டு முடிவுகளில், ஆண்டு பிரீமியம் மற்றும் மதிப்புமிக்க புதிய வணிகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது, ஆனால் VNB மார்ஜினில் காலாண்டுக்கு காலாண்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal) என்ற சந்தை கணிப்பு நிறுவனம் பங்கின் இலக்கு விலையாக ரூ.1,085 என நிர்ணயித்துள்ளது. தற்போது பங்கு ரூ.807.55 விலையில் வர்த்தகமாகிறது. JP Morgan என்ற சந்தை கணிப்பு நிறுவனம் LIC -க்கு குறித்து நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்தப் பங்கின் இலக்கு விலையாக ரூ.1,115 என நிர்ணயித்துள்ளது, இது முன்பு ரூ.1,075 ஆக இருந்தது. அதே நேரத்தில், CITI என்ற சந்தை கணிப்பு நிறுவனம் வாங்கும் மதிப்பீட்டை வழங்கி, இலக்கு விலையை ரூ.1,385 இலிருந்து ரூ.1,180 ஆகக் குறைத்துள்ளது. Goldman Sachs நடுநிலை மதிப்பீட்டை வழங்கி, இலக்கு விலையை ரூ.970 இலிருந்து ரூ.900 ஆகக் குறைத்துள்ளது.

3. சன் டிவி நெட்வொர்க் விலை இலக்கு 

கலாநிதி மாறனின் நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்கின் பங்கில், CLSA என்ற சந்தை கணிப்பு நிறுவனம் காத்திருப்பு மதிப்பீட்டை வழங்கியுள்ளது. சந்தை கணிப்பு நிறுவனம் அதன் இலக்கு விலையை ரூ.766 இலிருந்து ரூ.670 ஆகக் குறைத்துள்ளது. சன் டிவி நிறுவனம் BSE-ல் தாக்கல் செய்து இருக்கும் அறிக்கையின்படி, செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய் 10.35% குறைந்து ரூ. டிசம்பர் காலாண்டில் 827.56 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலத்தில் ரூ. 923.15 கோடியாக இருந்தது. நெட்வொர்க்கின் மொத்த வருமானமும் 8% குறைந்து ரூ. 967.56 கோடியை எட்டியது. இது ஆண்டுக்கு ஆண்டு சுமார் 10% குறைவாகும். நிறுவனத்தின் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்புகளை விடக் குறைவாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், விளம்பர வருவாயில் ஏற்பட்ட சரிவு என்று CLSA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 10, திங்கட்கிழமை, பங்கு சுமார் 4% சரிந்து ரூ.605.95 இல் முடிவடைந்தது. இந்தப் பங்கையும் வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு- எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன், உங்கள் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

ஜில்லெட் இண்டியாவின் மிகப்பெரிய டிவிடெண்ட் அறிவிப்பு!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு