ரிசர்வ் வங்கி செய்த ஒற்றை சம்பவம்.! மீண்டும் ஏற்றம் கண்ட இந்திய ரூபாய் மதிப்பு.!

Published : Dec 18, 2025, 02:29 PM IST
Dollar Vs Rupee

சுருக்கம்

அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த இந்திய ரூபாய், ரிசர்வ் வங்கியின் திடீர் நடவடிக்கையால் மீண்டும் வலுப்பெற்றது.  இதனால் ரூபாய் மதிப்பு உயர்ந்ததோடு, அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் RBI மீட்டெடுத்துள்ளது.

இனி இந்திய ரூபாய் மதிப்பு வலுப்பெறும்

சமீப நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு 91-ஐ தாண்டி வரலாறு காணாத வீழ்ச்சியை தொட்டது. இதனால் இறக்குமதி செலவு அதிகரிப்பு, பணவீக்கம், பங்குச்சந்தை அழுத்தம் போன்ற பல பொருளாதார கவலைகள் எழுந்தன. இந்த சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எடுத்த ஒரே ஒரு முக்கிய முடிவு ரூபாய் மதிப்பை மீண்டும் வலுப்படுத்தியது.

அமெரிக்க டாலர்களை அள்ளி வீசிய ரிசர்வ் வங்கி

நேற்று சந்தை துவங்கிய தருணத்திலிருந்தே ரிசர்வ் வங்கி டாலர்களை சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கியது. மொத்தமாக சுமார் 5 பில்லியன் டாலர்கள் சந்தையில் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் டாலர் தேவையை குறைத்து, ரூபாய் வழங்கலை அதிகரித்தது RBI. இதன் நேரடி விளைவாக, சந்தை முடிவில் ரூபாய் மதிப்பு 90.38 என்ற நிலைக்கு உயர்ந்து, ஒரு நாள் முன்னேற்றமாக வலுவான மீட்பை பதிவு செய்தது.

ஓடி வந்த அன்னிய முதலீட்டாளர்கள்

இந்த நடவடிக்கை ரூபாய் மதிப்பை மட்டும் காப்பாற்றவில்லை; வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் மீட்டெடுத்தது. நீண்ட நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் இருந்து விலகி இருந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) நேற்று மீண்டும் இந்திய சந்தையை நோக்கி வந்தனர். டிசம்பர் மாதம் தொடங்கி 17 நாட்கள் கடந்த நிலையில், நேற்று மட்டும் சுமார் ரூ.1,171 கோடி மதிப்புள்ள பங்குகளை அவர்கள் வாங்கியுள்ளனர்.

ரிசர்வ் வங்கி தந்த நம்பிக்கை

உலகளவில் பெரிய பொருளாதார மாற்றமோ, புதிய ஒப்பந்தங்களோ, முக்கிய அறிவிப்புகளோ இல்லாத நிலையிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு திரும்பியதற்கு ஒரே காரணம் RBI எடுத்த இந்த உறுதியான நடவடிக்கையே என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ந்தால், அதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி உடனடியாக தலையிடும் என்ற நம்பிக்கை தான் அவர்களை இந்தியாவை நோக்கி ஓடி வரச் செய்துள்ளது.

மொத்தத்தில், ரிசர்வ் வங்கி எடுத்த இந்த ஒற்றை நடவடிக்கை, இந்திய ரூபாயின் மதிப்பை மீண்டும் மீட்டெடுத்ததுடன், சந்தைகளில் நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்காலத்தில் ரூபாய் மதிப்பை பாதுகாக்கும் ஒரு வலுவான சைகையாகவே பார்க்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Toll Update: ஊருக்கு போறீங்களா? இனி டோல்கேட்டில் நிற்கவே தேவையில்லை! பெட்ரோல், நேரம் எல்லாமே மிச்சம்.!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?