மனைவிக்கு பணம் கொடுத்தால் பிரச்சனையா.? வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்

Published : Dec 15, 2025, 04:14 PM IST
income tax

சுருக்கம்

கணவன்-மனைவி இடையேயான பணப் பரிமாற்றங்கள் இயல்பானவை என்றாலும், வருமான வரி விதிகளை மீறினால் சிக்கல் வரலாம். ரொக்கப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது வரி நோட்டீஸைத் தவிர்க்க உதவும்.

கணவன்–மனைவி இடையே பண பரிமாற்றங்கள் இந்திய குடும்பங்களில் மிகவும் சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வீட்டுச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக பணம் கொடுக்கப்படுவது இயல்பானதே. ஆனால் இந்த பண பரிவர்த்தனைகள் வருமான வரி விதிகளை கவனிக்காமல் செயல்படுத்தினால், வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் வரக்கூடும் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும்.

வருமான வரி சட்டத்தில் கணவன்–மனைவி இடையே ரொக்க பரிவர்த்தனைகளை நேரடியாக தடை செய்யும் விதி இல்லை. இருப்பினும், பணம் எதற்காக, எந்த அளவில், எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் வரி சிக்கல்கள் உருவாகலாம். குறிப்பாக பெரிய தொகைகள் ரொக்கமாக வழங்கப்பட்டால், வருமானத்தை மறைக்க அல்லது வரியை தவிர்க்கும் முயற்சியா என வருமான வரித்துறை சந்தேகம் எழுப்ப வாய்ப்பு உள்ளது.

வரி நிபுணர்களின் கூற்றுப்படி, கணவன் தனது மனைவிக்கு வீட்டு செலவுகள் அல்லது பரிசாக பணம் கொடுத்தால், அந்த தொகைக்கு மனைவிக்கு தனியாக வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த தொகை கணவனின் வருமானத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை மனைவி மீண்டும் முதலீடு செய்து வருமானம் ஈட்டினால், அங்கேயே வரி கணக்கு தொடங்குகிறது.

மனைவி, கணவனிடமிருந்து பெற்ற பணத்தை நிலுவை வைப்புத் தொகை (FD), பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் அல்லது சொத்து வாங்கினால், அதிலிருந்து வரும் வருமானம் வரிக்குட்படும். மனைவியின் மொத்த வருமானம் வரிவிதிப்பு வரம்பை கடந்தால், அந்த வருமானத்தை அவரது ITR-ல் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.

சில நேரங்களில், இந்த முதலீடு வரி சேமிப்பு நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்ட வருமான வரித்துறை நிரூபித்தால், “Clubbing of Income” விதியின் கீழ் அந்த வருமானத்தை கணவனின் வருமானத்துடன் இணைக்க முடியும். இதில் முக்கியமான இரண்டு விதிகள் வருமான வரி சட்டத்தின் 269SS மற்றும் 269T பிரிவுகள். 269SS பிரிவு படி, ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை கடன் அல்லது டெபாசிட் வடிவில் ரொக்கமாக பெற முடியாது.

269T பிரிவு படி, அதே அளவு தொகையை ரொக்கமாக திருப்பி செலுத்த முடியாது. இவை கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட விதிகள் ஆகும். கணவன்–மனைவி உறவு நெருக்கமானதாக இருப்பதால், உண்மையான மற்றும் நேர்மையான பரிவர்த்தனைகளுக்கு பொதுவாக அபராதம் விதிக்கப்படாது. ஆனால், அதனால் விதிகளை முழுமையாக புறக்கணிக்க முடியாது. பெரிய தொகைகளை எப்போதும் வங்கி வழியாக (NEFT, RTGS, UPI, காசோலை) வழங்குவது பாதுகாப்பானது.

வரி நோட்டீஸ் வராமல் இருக்க, ரூ.20,000-ஐ மீறும் ரொக்க பரிவர்த்தனைகளை தவிர்ப்பது, முதலீட்டு வருமானங்களை சரியாக ITR-ல் குறிப்பிடுவது, அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். சிறிய கவனக்குறைவால் பெரிய அபராதம் வராமல் இருக்க, சந்தேகம் ஏற்பட்டால் வரி ஆலோசகரை அணுகுவது சிறந்தது.

இந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே. இது சட்ட அல்லது வரி ஆலோசனையாக கருதப்படக் கூடாது. வருமான வரி விதிகள் காலப்போக்கில் மாறக்கூடும். தனிப்பட்ட வரி தொடர்பான முடிவுகளுக்கு தகுந்த வரி நிபுணரை அணுகவும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! யோனோ 2.0 செயலி அறிமுகம்!
New Year ஆஃபர் கிடைக்காது போல.! LED டிவி விலை ஏறப்போகுதாம்! காரணம் தெரியுமா?