Share Market: 3 வது நாளாக லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்! தொடர்ந்து அள்ளிக்கொடுத்த Sensex, Nifty!

Published : Jun 26, 2025, 04:26 PM IST
Share Market

சுருக்கம்

இந்திய பங்கு சந்தை தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக உயர்வை கண்டது. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 83,755 புள்ளியிலும், நிஃப்டி 25,549 புள்ளியிலும் முடிவடைந்தது. 

இன்று பங்கு சந்தையில் நிகழ்ந்த பரபரப்பான மாற்றங்கள், முதலீட்டாளர்களிடையே பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இந்திய பங்கு சந்தை மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக உயர்வை கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் நிஃப்டி முக்கியமான 25,500 புள்ளியை கடந்தது. உலக சந்தைகளில் நிலவிய நேர்மறையான சூழ்நிலைகளும், ஜியோபாலிட்டிக்கல் பதற்றங்களின் தணிப்பும், இந்தியாவில் முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சந்தை நிலவரம்

சென்செக்ஸ் இன்று காலை 82,882.92 புள்ளியில் திறந்தது. பரிவர்த்தனைக்கேற்ற முக்கிய நேரங்களில் 83,812.09 என்ற உயர்ந்த நிலையில் சென்றது. இறுதியில், 1.21% வளர்ச்சியுடன் 83,755 புள்ளியில் நிறைவடைந்தது. நிஃப்டி குறியீடு 25,268.95 புள்ளியில் திறக்கப்பட்டது. அதுவும் 1.21% (304.25 புள்ளிகள்) உயர்வுடன் 25,549 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தில், 25,259.90 முதல் 25,565.30 வரை மாறுபாடுகளைக் கண்டது.

அதிகம் வாங்கப்பட்ட துறைகள்

நிப்டி உலோகத்துறை இன்று அதிகமான முதலீட்டு ஈர்ப்பைப் பெற்றது. இது சுமார் 2% அளவுக்கு உயர்ந்தது. அதன் பின்னர் நிப்டி எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளும் முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்பட்டது.வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோக பங்குகள் ஆகியவை சந்தையின் மையப்புள்ளியாக today’s rally-க்கு வழிவகுத்தன. குறிப்பாக, பெரிய அளவிலான நிறுவன பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக ஆதரவு காணப்பட்டது.

சந்தை உயர்வுக்கு இதுதான் காரணம்

முக்கியமான துறைகளில் வலுவான வாங்குதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரித்தது ஆகியவை சந்தையை ஊக்குவித்ததாகவும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் குறைந்துள்ள சூழ்நிலையில், இந்திய ரூபாயின் நிலைத்தன்மையும் கூடுதல் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது எனவும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.பெரிய நிறுவனங்கள் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் எனவும் நிதி நிறுவனங்கள், மூலதன பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளை கவனித்து வாங்கலா் என்றும் சந்தை ஆலோசகர்கள் கூறினர்.

நம்பிக்கை தந்த சந்தைகள்

இஸ்ரேல் – ஈரான் இடையேயான பதற்றங்கள் ஓய்வதற்கான செய்திகள் மற்றும் ஆசிய சந்தைகளில் நிலவிய வளர்ச்சி, இந்திய சந்தையை நேர்மறையான பாதையில் நகர்த்தியது. மேலும், சமீபத்திய ரிசர்வ் வங்கி கொள்கைகளின் தொடர்ச்சியான நிலைத்தன்மையும் நம்பிக்கையை அதிகரித்தது.மொத்தத்தில் இன்றைய பங்குசந்தை உயர்வு, ஒரு திடமான அடிப்படையுடன் கூடியதாகும். இது முதலீட்டாளர்களுக்கு எதிர்காலத்திலும் சந்தை வளர்ச்சி மீதான நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. முதலீட்டாளர்கள் பங்கு தேர்வில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியதுடன், கவனமாகவும் இருக்க வேண்டும்.முடிவாக, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் சந்தையில் ஏற்பட்ட வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்தின் வலிமையை காட்டுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.. பென்ஷன் தொகை உயருகிறதா? நாடாளுமன்ற நிலைக்குழு சொன்ன குட்நியூஸ்!
Crude Oil Prices: அடிமாட்டு விலைக்கு கிடைக்குமா கச்சா எண்ணெய்? ஹார்முஸ் ஜலசந்தியில் நடப்பது என்ன?!