Share market today: ஆட்டம் காணும் பங்குச்சந்தை: சென்செக்ஸ் சறுக்கல்: என்ன காரணம்?

Published : Mar 02, 2022, 10:03 AM ISTUpdated : Mar 02, 2022, 11:17 AM IST
Share market today: ஆட்டம் காணும் பங்குச்சந்தை: சென்செக்ஸ் சறுக்கல்: என்ன காரணம்?

சுருக்கம்

Share market today: உக்ரைன் மீது போரை தீவிரப்படுத்தும் ரஷ்யா, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், சர்வதேச காரணிகளால் மும்பை, தேசியப்பங்கு சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை சரிவுடன் தொடங்கியது.

Share market today: உக்ரைன் மீது போரை தீவிரப்படுத்தும் ரஷ்யா, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், சர்வதேச காரணிகளால் மும்பை, தேசியப்பங்கு சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை சரிவுடன் தொடங்கியது.

கடந்த 6 நாட்களாக சந்தையில் இழப்பு தொடர்ந்தநிலையில் கடந்த இரு நாட்களாக ஓரளவுக்கு புள்ளிகள் உயர்ந்து வந்தன. ஆனால், இன்று காலையிலிருந்து மீண்டும் வர்த்தகம் சரிவை நோக்கிப் பயணித்து வருகிறது.

என்ன காரணம்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தீவிரமடைந்துவருகிறது. இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பெலாரஸில் நடத்திய முதல் சுற்றுப்பேச்சும் தோல்வி அடைந்தநிலையில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போரால் உலகப் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாடுகளும் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் மட்டுமின்றி, பல்வே்று தடைகளையும் விதித்து வருகின்றனர்.

அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க அதிபர் ஜோ பிடன் தடை விதித்தார். இரு நாடுகளின் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 110 டாலராக அதிகரித்துள்ளது. இதன் பாதிப்பு ரஷ்ய, உக்ரைன் நாடுகளின் கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகளை கடுமையாக பாதிக்கும், உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் பணவீக்கத்தை அதிகப்படுத்தும். 

மேலும், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா பங்குச்சந்தைகளும் சரிவுடன் முடிந்து ஆசியப்பங்குச்சந்தையிலும் நம்பிக்கையற்ற சூழல் நிலவுகிறது. இந்த பாதிப்பு இந்தியப் பங்குச்சந்தையிலும் இன்று காலையிலிருந்தே எதிரொலித்தது.

வர்த்தகம் இன்று காலை தொடங்கியவுடநே 650 புள்ளிகள் சரிவுடன்  55,577  புள்ளிகளில் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 177 புள்ளிகள் சரிந்து 16,700 புள்ளிகளுக்கும் கீழ் வர்த்தகத்தை தொடங்கியது.
மும்பைப் பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல், பவர்கிர்ட், என்டிபிசி, டெக் மகிந்திரா, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன. ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுஸூகி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், கோடக் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், இன்டஸ்இன்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிந்துள்ளன

நிப்டியில் கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஹின்டால்கோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப்பங்குகள் லாபமடைந்தன. வங்கி, ஆட்டமொபைல், நிதித்துறை பங்குகள் சரிந்துள்ளன. உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு , தகவல்தொழில்நுட்பம் ஆகியவற்றின் பங்குகள் லாபமடைந்துள்ளன
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!