உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்; எதனால் இன்று பங்குச் சந்தை காளை துள்ளிக் குதித்தது!!

Published : Jun 21, 2023, 01:11 PM ISTUpdated : Jun 21, 2023, 01:12 PM IST
உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்; எதனால் இன்று பங்குச் சந்தை காளை துள்ளிக் குதித்தது!!

சுருக்கம்

இந்திய பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 63,588 புள்ளிகளை தொட்டு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கிய சில மணி நேரங்களில் சென்செக்ஸ் உச்சத்திற்கு சென்றது. அதாவது சென்செக்ஸ் 63,588 புள்ளிகளை தொட்டது. அதேசமயம் 50  பங்குகளைக் கொண்ட நிப்டி 12 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டது. நிதி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. அதேசமயம் மருந்து நிறுவனங்களின் பங்குகள் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த பங்குகளின் மதிப்பு குறைந்து காணப்பட்டது. நிஃப்டி 18,887.60 என்ற உச்சத்தில் இருந்து சிறிது நேரத்தில்18,870 புள்ளிகளில் வர்த்தகமானது.

சென்செக்ஸ் பங்குகளில் அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட், விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்&டி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் டிசிஎஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் பிரமல் எண்டர்பிரைசஸ் 10% உயர்வுடன் துவங்கியது. ஏனெனில் பிரமல் எண்டர்பிரைசஸ் பிளாக் டீல் முறையில் பங்குகளை விற்க முன் வந்தது.

Today Gold Rate in Chennai : சொன்னா நம்பமாட்டிங்க! தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு குறைந்தது!

பிளாக் டீல் என்பது பங்குகள் அல்லது பத்திரங்களின் ஒரு பெரிய பரிவர்த்தனை ஆகும். இது பங்கு வர்த்தகத்திற்கு வெளியே இரு தரப்பினருக்கு இடையில் நடைபெறுவதாகும். பொதுவாக பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் மூலம் இது நடைபெறும். 

ரயில் விகாஸ் நிகாம் (ஆர்விஎன்எல்) பங்குகள் 4% உயர்ந்தன. நிஃப்டி வர்த்தகத்தில் ஆட்டோ சார்ந்த பங்குகளின் மதிப்பு 0.61%மும், நிதி சார்ந்த பங்குகளின் மதிப்பு 0.51%மும் உயர்ந்து காணப்பட்டன.  வங்கிகள், எஃப்எம்சிஜி, ஐடி, மீடியா, ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகளும் லாபத்துடன் துவங்கின. நிஃப்டி மிட்கேப்பில் 100 பங்குகள் 1.01% உயர்ந்து காணப்பட்டது. நிஃப்டி ஸ்மால்கேப்பில் 100 பங்குகளின் மதிப்பு 0.68% உயர்ந்து காணப்பட்டது. 

ஓய்வூதியத்திற்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் இவை தான்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு மாதங்களாக, குறிப்பாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வருகின்றன. வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பிற நாடுகளுக்கு எதிராக, வலுவான வருவாய், சிறந்து விளங்கி வரும் வங்கித் துறை, பல்வேறு துறைகளில் வலுவான தேவை, ஆகியவற்றால் இன்று இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டு இருக்கிறது. மேலும் நிப்டி மிட் கேப் பங்குகளின் வர்த்தம் நன்றாக இருந்ததால் பொதுவாக இன்று வர்த்தகம் உயர்ந்து காணப்பட்டது என்று கூறப்படுகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்