sbi : எஸ்பிஐ(SBI) வாடிக்கையாளர்களுக்கு புதியவசதி! இந்த 5 முக்கிய சேவைகளை மொபைலிலேயே பெறலாம்

Published : Jul 05, 2022, 03:39 PM ISTUpdated : Jul 05, 2022, 04:06 PM IST
sbi : எஸ்பிஐ(SBI) வாடிக்கையாளர்களுக்கு புதியவசதி! இந்த 5 முக்கிய சேவைகளை மொபைலிலேயே பெறலாம்

சுருக்கம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி, தங்களின் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் மூலம் 5 விதமான முக்கிய சேவைகளை வழங்குகிறது. 

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தங்களின் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் மூலம் 5 விதமான முக்கிய சேவைகளை வழங்குகிறது. 

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்த 5 சேவைகளுக்காக வங்கிக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்க்கலாம். இந்த 5 சேவைகளும் இலவச தொலைப்பேசி எண்களில் 24 மணிநேரமும் பெறலாம்.

சேவை:1

வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தின் இருப்பையும், கடைசி 5 பரிமாற்றத்தின் தகவல்களையும் பெறலாம்.

சேவை: 2

ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடுபோய்விட்டாலோ அந்த கார்டை பிளாக் செய்யும் வசதி. ஏடிஎம் கார்டு வங்கியிலிருந்து வாடிக்கையாளர்களுக்குஅனுப்பப்பட்டுவிட்டால் அதை அறிந்து கொள்ளும் வசதி

சேவை: 3
காசோலை புத்தகம் வங்கியிலிருந்து வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டு விட்டதா அல்லது நிலவரம் என்ன ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வசதி

சேவை: 4

டிடிஎஸ் பிடித்தம் விவரங்கள், பணத்தை டெபாசிட் செய்திருந்தால், அதற்குரிய சான்றிதழை மின்அஞ்சலில் அனுப்பப்பட்ட தகவலை அறிதல்

சேவை: 5

பழைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது பிளாக் செய்துவிட்டாலோ புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி.

 

 

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு உதவி பெறும் வகையில் டோல்ஃப்ரீ எண் வழங்கப்பட்டுள்ளது.
முதல் எண்: 1800 1234
2-வது எண்: 1800 2100

இது தவிர 24 மணிநேரமும் அழைக்கும் வகையில் 1800 11 2211 என்ற எண்ணும், 1800 425 3800 என்ற 2-வது எண்ணும், 080-26599990 ஆகிய எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. டோல்ஃப்ரீ எண்களை லேண்ட்லைன் தொலைப்பேசி, மொபைல் போன்களில் இருந்தும் தொடர்பு கொள்ள முடியும்

எஸ்பிஐ வங்கிக்கு நாடுமுழுவதும்22,266 கிளைகளும், 65,030 ஏடிஎம் மையங்களும், 68,016 பிசி அவுட்லெட்களும் உள்ளனஎன்பது குறிப்பிடித்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்