
நாட்டில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் மாதம் நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ ரேட் மேலும் 25 புள்ளிகள் உயர்த்தப்படலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் கடனுக்கானவட்டி வீதம் 40 புள்ளிகளைக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. கொரோனாவில் மக்களின் வாழ்வாதாரம் மோசமடைந்ததால், வட்டிவீதத்தைரிசர்வ் வங்கி குறைத்தது.
ஆனால், கடந்த 3 மாதங்களாக பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்சட்டக் கட்ட அளவைவிடக்க டந்துவிட்டதால் வேறு வழியின்றி வட்டிவீதத்தை நேற்று ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதன்படி 4 சதவீதமாக இருந்த கடனுக்கான வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வங்கிகளுக்கான ரொக்கக் கையிருப்பு விகிதமும் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் மாத சில்லரைப் பணவீக்கம் 7சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு,பணவீக்கத்தைத் கட்டுப்படுத்த ஜூன் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை மேலும் 25 புள்ளிகள்வரை உயர்த்தலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போது கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4.40 என்ற ரீதியில் இருக்கிறது, ஜூனில் 25 புள்ளிகள் உயர்ந்தால், 4.65 புள்ளிகளாக அதிகரிக்கும்.
ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் அபீக் பருவா கூறுகையில் “ ஏப்ரல் மாதம் பணவீக்கம் 7 சதவீதத்தைக் கடந்து செல்லும்,இது எதிர்பார்ப்பைவிட அதிகரிக்கலாம். எங்கள் கணிப்பின்படி 7.6சதவீதம் வரை பணவீக்கம் உயரும். அவ்வாரு உயர்ந்தால், ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை 2-வது முறையாக உயர்த்த வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படும்.
தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதத்தை உயர்த்துவதுதான் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ஆதலால், நடப்பு நிதியாண்டு முடிவுக்குள் வட்டிவீதம் 5.15 சதவீதமாக அதிகரிக்கலாம். ரஷ்யா உக்ரைன் போர், அமெரி்க்க பெடரல் வங்கி வட்டிவீதம் உயர்வு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். “ எனத் தெரிவித்தார்
எம்கே குளோபல் நிறுவனத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் மாதவி அரோரா கூறுகையில் “ பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஜூன் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதம் 25 புள்ளிகளை ரிசர்வ் வங்கி உயர்த்தலாம்” எனத் தெரிவித்தார்
கோடக் ஈக்யுட்டிஸ் நிறுவனத்தின் மூத்த பொருளதார நிபுணர் சுவதீப் ரக்சித் கூறுகையில் “ பணவீக்கம் கட்டுக்கடங்காமல் செல்லும்போது, அதைக் கட்டுப்படுத்தரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கருவி வட்டிவீதம் அதிகரிப்புதான். ஆதலால், நடப்பு நிதியாண்டுக்குள் 75 முதல் 100 பிபிஎஸ் வரை வட்டிவீதம் உயரலாம். ஜூன் மாதம் மேலும் 25 புள்ளிகள் உயரக்கூடும் 2022ம் ஆண்டு முடிவுக்குள் 5சதவீதமாக வட்டி வீதம் உயரும்” எனத் தெரிவி்த்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.