#Repo வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; 6.50% ஆக தொடரும்; வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தொகை அதிகரிக்குமா?

Published : Oct 06, 2023, 10:28 AM ISTUpdated : Oct 06, 2023, 11:04 AM IST
#Repo வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; 6.50% ஆக தொடரும்; வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தொகை அதிகரிக்குமா?

சுருக்கம்

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, தற்போதைய நிலையைத் தொடர முடிவு செய்து ரெப்போ வட்டி விகிதத்தை 6.50% ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது.   

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் நிதிக் கொள்கை குறித்து ஒவ்வொரு மாதமும் ஆலோசித்து அதற்கு தகுந்தவாறு ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்கள் ஆய்வுக்குப் பின்னர் இன்று ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குறித்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், 6.50%-த்திலேயே தொடரும் என்று அறிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் போரை அடுத்து ரிசர்வ் வங்கி மே, 2022-ல் படிப்படியாக கொள்கை விகிதங்களை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக உயர்த்தியது. இதையடுத்து தொடர்ந்து வந்த மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. ரெப்போ விகிதம் மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையிலான கால கட்டங்களில் ஒட்டுமொத்தமாக 250 பேசிஸ் பாயின்ட் விகிதத்தில் உயர்த்தப்பட்டது.

Today Gold Rate in Chennai : நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! முந்துங்கள்.!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாத காரணத்தால், வங்கிக் கடனில் வீடு வாங்கி வங்கிக்கு கடன் செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் இல்லை. இதுவரை  மாதம்தோறும் வங்கிகளுக்கு செலுத்தி வரும் வீட்டுக் கடன் தொகையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது அறிவிப்பில், ''அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டின் (2023-23க்கான) நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி) 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக பாதகங்களும் சரி சமமாக இருக்கும். அடுத்த நிதியாண்டான 2024-25-ன் முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  2023ஆம் ஆண்டில் அக்டோபர்-டிசம்பருக்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 6.0 சதவீதமாகவும், 2024 இல் ஜனவரி-மார்ச் மாதத்திற்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 5.7 சதவீதமாகவும் உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு நாளைக்கு ரூ.50 மட்டும் போதும்.. ரூ.35 லட்சம் கிடைக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் தெரியுமா.?

ஆனால், 2023ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் உணவு பணவீக்கம் நிலையானதாக இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும்'' என்றார்.

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?

வர்த்தக வங்கிகளுக்கு மத்திய வங்கி கொடுக்கும் கடன் மீதான வட்டி விகிதம்தான் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை மத்திய வங்கி அதிகரிக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தக் கூடும். இது ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது. தற்போது மத்திய வங்கி கடன் மீதான வட்டியை உயர்த்தாத நிலையில், வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களையும் பாதிக்காது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்