
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்திட்டம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு உதவியாக இருக்கும். அதாவது, முன்பு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம்-கிசான்) கீழ் விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற்று வந்தனர். தற்போது இந்த நிதியுதவியை விவசாயிகளுக்கு அரசு இரட்டிப்பாக்கியுள்ளது.
நமோ ஷேத்காரி மகா சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்றபோது அறிவித்தார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் சிறு விவசாயிகள் பயனடைவார்கள். பொது நிகழ்ச்சியின் போது, பிரதமர் ‘நமோ ஷேத்காரி மஹாசம்மன் நிதி யோஜனா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 86 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் ஆண்டுக்கு ரூ.6,000 கூடுதல் தொகையை வழங்குவதன் மூலம் பயனடைவார்கள். முன்பு விவசாயிகளுக்கு ரூ.6000 மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிர விவசாயிகளுக்கு அது இரட்டிப்பாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
மகாராஷ்டிரா அரசு ‘நமோ ஷேத்காரி மஹா சம்மன் நிதி யோஜனா’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார், இதன் கீழ் மகாராஷ்டிராவின் ஷேத்காரி குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.6000, அதாவது உள்ளூர் சிறு விவசாயிகளுக்கு சம்மன் நிதியாக ரூ.12,000 வழங்கப்படும். இந்த திட்டம் மகாராஷ்டிராவில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 86 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் கூடுதலாக வழங்குவதன் மூலம் பயனடையும்.
விண்ணப்பிக்கும் நபரிடம் மகாராஷ்டிராவின் இருப்பிடச் சான்று இருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையும் இருக்க வேண்டும். மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும், மேலும் PM-கிசான் பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும். இது தவிர விவசாய நிலம் தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பதுடன் வங்கி கணக்கு விவரங்களையும் அளிக்க வேண்டும்.
நமோ ஷேத்காரி மஹா சம்மன் நிதி திட்டத்திற்காக தனி போர்டல் எதுவும் உருவாக்கப்படவில்லை. இருப்பினும், இத்திட்டம் பற்றிய தகவல்களை மகாராஷ்டிரா அரசின் வேளாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறலாம். பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகள் நமோ ஷேத்காரி மகா சம்மன் நிதி திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இருப்பினும், அவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ரயிலில் பயணம் செய்யும் போது மதுபானத்தை எடுத்து செல்லலாமா.? ரயில்வே வெளியிட்ட புது விதிகள்..
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.