
போன் பில் தாமதமா கட்டினால், உங்கள் பர்சனல் லோன் கேன்சல்......!!!
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலே,கடன் வழங்கும் வங்கிகள் , விண்ணப்பதை பரிசீலனை செய்து, இரண்டு வாரத்திற்குள், பணத்தை கொடுகிறது.
அதாவது அவசர காலத்தில் , பர்சனல் லோன் வாங்க , போன் பில் முதல் அனைத்தும் ஆராயப்படுகிறது..மேலும், , பான்கார்டு, ஆதார் கார்டு அடிப்படையிலும் கடன் வழங்குவது பரிசீலனை செய்யப்படுகிறது.
மேலும், கிரெடிட் கார்டு, போன் பில் தாமதமாக கட்டியிருந்தாலோ, கட்டாமல் நிலுவை வைத்திருந்தோலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்துள்ளன.
அதுமட்டும் இல்லாமல், எல்லாமே ஆன்லைன் என்பதால், மொபைல் அப்ளிகேஷன் மூலம் கடனுக்கு விண்ணப்பம் செய்பவர், எங்கிருந்து விண்ணப்பிக்கிறார் என்பதை ஜிபிஎஸ் லொகேஷன் மூலம் அறியவும் முடிகிறது என தெரிவித்துள்ளன.
இதுபோல் எஸ்எம்எஸ்சில் வரும் வங்கி பரிவர்த்தனை விவரங்கள், இ-வாலட் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்பட்டு , பின்பு தான் கடன் வழங்கப்படுகிறது.
பேஸ்புக், லிங்க் , ட்விட்டர் போன்றவற்றில் அவர்கள் பற்றி வரும் கமென்ட்களும் கடன் பரிசீலனைக்கு உதவிகரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன்பில் தாமதமாக கட்டிஇருந்தால் கூட, லோன் கிடைப்பது கடினம் தான் என்பது தான் இப்போதைய நிலைமை......!!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.