வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்னும் 6 நாட்கள் மட்டுமே அவகாசம்..!

Published : Sep 24, 2020, 11:55 AM IST
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்னும் 6 நாட்கள் மட்டுமே அவகாசம்..!

சுருக்கம்

ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

2018-2019ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிலையில், கொரோனா காரணமாக ஜூலை 31ஆம் தேதி வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ஆதாய நடவடிக்கைகளால், வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது 2018ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கொரோனாவால் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதையும் தவறவிட்டால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்காக வருமானவரித் துறையின் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

உங்கள் வங்கி கணக்கில் இந்த 10 பரிவர்த்தனைகள் நடந்தால், வருமான வரித்துறையில் மாட்டிக்கொள்வீர்கள்.! எச்சரிக்கை.!
ஹெச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.! ஏப்ரல் 1 முதல் புதன் கட்டணங்கள்.! வாடிக்கையாளர் கவனத்திற்கு.!