எல்ஐசி பங்குகளை வாங்க விரும்பும் பாலிசி பாலிசிதாரர்கள் எல்ஐசி பாலிசியுடன், பான் எண்ணை இணைக்கும் கடைசித் தேதி இன்று(28ம்தேதி) முடிகிறது
எல்ஐசி பங்குகளை வாங்க விரும்பும் பாலிசி பாலிசிதாரர்கள் எல்ஐசி பாலிசியுடன், பான் எண்ணை இணைக்கும் கடைசித் தேதி இன்று(28ம்தேதி) முடிகிறது
மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது. வரும் மார்ச் 11ம்தேதி எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை இருக்கலாம்.
இந்த 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன.
இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. அதாவது எல்ஐசியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரையிலும், பாலிசிதாரர்களுக்கு 5 % வரையிலும் தள்ளுபடி தரப்படலாம் எனத் தெரிகிறது
இந்நிலையில் எல்ஐசி தாக்கல் செய்த வரைவு அறிக்கையில், “ பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க விரும்பினால், அவர்கள் பாலிசியுடன் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அதாவது பிப்ரவரி 28ம் தேதிக்குள் பாலிசிதாரர்கள் தங்கள் பாண் எண்ணை பாலிசியுடன் இணைத்திருக்கவேண்டும். அவ்வாறு இணக்காவிட்டால், அவர் பங்குவிற்பனையில் பங்கேற்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
எல்ஐசி பாலிசியுடன் பான் எண்ணை, இணையதளத்தில் சென்றோ அல்லது எல்ஐசி அலுவலகத்துக்குச்சென்றோ, அல்லது ஏஜென்டுகள் , பொதுச்சேவை மையம் மூலம் இணைக்கலாம். இந்தியாவில் வசித்துக்கொண்டு, ஒரு பாலிசிக்கு மேல் எடுத்திருப்பவர்களும், இந்த திட்டத்தின் கீழ் பங்குககளை வாங்க தகுதியுள்ளவர்கள்.
பாலிசியுடன்-பான் எண்ணை இணைப்பது எப்படி?