முதல் 100 நிறுவனங்கள் சாதனை.. முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு.. மோதிலால் ஓஸ்வால் ரிப்போர்ட்

Published : Dec 12, 2025, 01:38 PM IST
Motilal Oswal

சுருக்கம்

மோதிலால் ஓஸ்வாலின் ஆய்வின்படி, நிதிமயமாக்கல் மற்றும் வலுவான நிறுவன லாபங்கள் இந்தியாவிற்கு பல டிரில்லியன் டாலர் முதலீட்டு வாய்ப்பை உருவாக்குகின்றன.

நிதிமயமாக்கல் வேகமாக உயர்ந்து வருவது, பங்கு வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரிப்பது, அதோடு நிறுவனங்களின் வலுவான லாபம் இணைவது ஆகியவை ஆகும் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய பல டிரில்லியன் டாலர் வாய்ப்பை உருவாக்கும் என்று மோதியால் ஓஸ்வாலின் ஆய்வு கூறியுள்ளது. வருகிற தசாப்தங்களில் நீடிக்கும் செல்வ வளர்ச்சிக்கு தரமான நிறுவனங்களே முக்கியம் என்றும் ஆய்வு வலியுறுத்துகிறது.

சந்தை எப்போது உயர்ந்தது, எப்போது குறையும் முயற்சிகளை விட, நீண்டகாலத்தில் மதிப்பு உருவாக்கும் சரியான பங்குகளைத் தேர்வு செய்தால் மட்டுமே நிலையான செல்வம் உருவாகும் என அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் முதலீட்டு சூழல் வேகமாக மாறி வரும் வேலையில், இந்த ஆண்டின் கருப்பொருள் “இந்தியா – பல டிரில்லியன் டாலர் வாய்ப்பு” என வகுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, இந்தியப் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள், நிதி ஒதுக்கீட்டாளர்களுக்கு விரிந்த வாய்ப்புகளை வழங்குகிறது உருவாக்கப் போகிறது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. 2020–2025 காலத்தில் ஏற்பட்ட செல்வ உயர்வு கடந்த 30 ஆண்டுகளின் வரலாற்றிலேயே அதிகமானது என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் 100 நிறுவனங்கள் மட்டும் ரூ.148 டிரில்லியன் செல்வத்தை உருவாக்கியுள்ளன.

இந்த காலத்தில் பாரதி ஏர்டெல் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாகவும், பிஎஸ்இ அதிவேக வளர்ச்சி பெற்றதாகவும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) மிகச் சீரான செயல்திறன் கொண்டதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது. HAL இந்த ஆண்டின் சிறந்த ஆல்-ரவுண்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

துறைகளைப் பொருத்தவரை, நிதித்துறையே தொடர்ந்து அதிக சேமிப்பை உருவாக்கும் முன்னணி துறையாக உள்ளது. அதைத் தொடர்ந்து தொழில்துறை, மூலதன சந்தைகள், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு சேவைகள் ஆகியவை வேகமாக முன்னேறுகின்றன. பாதுகாப்பு, எரிசக்தி, யூட்டிலிட்டி துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் சந்தை மூலதனம் 17 சதவீத வளர்ச்சியுடன் உலகின் நான்காவது பெரிய பங்கு சந்தையாக உயர்ந்துள்ளது. இடையூறுகள் ஏற்பட்டாலும், பங்கு சந்தையில் நீண்டகால செல்வத்தை தொடர்ந்து விரிவுபடுத்தும் திறன் கொண்டது என ஆய்வு கூறுகிறது.

கடந்த 17 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி 1 டிரில்லியன் டாலரிலிருந்து 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அடுத்த 17 ஆண்டுகளில் இது மேலும் நான்கு மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. இதனால் பல துறைகளில் பல டிரில்லியன் டாலர் வாய்ப்புகள் உருவாகும். பொருளாதார வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்தும் என அறிக்கை கூறியுள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.10,000 முதலீட்டில் மாதம் ரூ.30,000 வருமானம்! பாரம்பரிய அரிசி விற்பனையில் அட்டகாசமான லாப வாய்ப்பு!
Gold Rate Today (December 12): தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்.! விலையை கேட்டு இல்லத்தரசிகள் மயக்கம்.!