hdfc mclr: கடன் வாங்கியவர்களுக்கு இப்படி சோதனையா: ஹெச்டிஎப்சி வங்கியின் எம்சிஎல்ஆர் ரேட் உயர்வு

Published : Jun 07, 2022, 02:07 PM ISTUpdated : Jun 07, 2022, 02:28 PM IST
hdfc mclr: கடன் வாங்கியவர்களுக்கு இப்படி  சோதனையா: ஹெச்டிஎப்சி வங்கியின் எம்சிஎல்ஆர் ரேட் உயர்வு

சுருக்கம்

HDFC Bank raises MCLR Rates on loans :நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி இறுதிநிலை கடனுக்கான செலவான எம்சிஎல்ஆர் வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்தி அறிவித்துள்ளது.

HDFC Bank raises MCLR Rates on loans: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி இறுதிநிலை கடனுக்கான செலவான எம்சிஎல்ஆர் வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த புதிய எம்சிஎல்ஆர் உயர்வு  இன்று முதல்(ஜூன்7ம்தேதி) அமலுக்கு வந்துள்ளது.

ஏற்கெனவே கடந்த மாதம் எம்சிஎல்ஆர் வீதத்தை 25 புள்ளிகளை ஹெச்டிஎப்சி வங்கி உயர்த்தி 7.15 சதவீதமாக அதிகரித்து இருந்தது. இப்போது மேலும் 35 புள்ளிகள் உயர்த்தப்பட்டதையடுத்து, கடந்த ஒரு மாதத்துக்குள் 60 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி எல்எல்சிஆர் புள்ளிகளை உயர்த்தியுள்ளதையடுத்து, வீ்ட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி உயரும். கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணமும் மேலும் அதிகரி்க்கும்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நாளை நடக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே எம்சிஎல்ஆர் வீதத்தை ஹெச்டிஎப்சி வங்கி உயர்த்திவிட்டது.  நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதம் உயர்வது உறுதியாகிவிட்டநிலையில் முன்கூட்டியே உயர்த்திவிட்டது. 

பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கருத்துப்படி, ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி நாளை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் 50 புள்ளிகள் வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்டிஎப்சி வங்கி எம்சிஎல்ஆர்வீதத்தை உயர்த்தியதையடுத்து, 7.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கு முன் ஹெச்டிஎப்சி எம்எல்சிஆர் 7.15 சதவீதமாக இருந்தது, 35 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, இனி 7.50 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாதத்துக்கான எம்எசிஎல்ஆர் 7.50% மற்றும் 3 மாதத்துக்கான எல்எல்சிஆர் 7.55 சதவீதமாகவும், 6 மாதத்துக்கான எம்எல்சிஆர் 7.70சதவீதமாகவும் இருக்கும். ஓர் ஆண்டு, 2 ஆண்டு 3 ஆண்டு எம்எல்எசிஆர் வீதம், முறையே 7.85%, 7.95%, 8.05 சதவீதமாக இருக்கும்.

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில்தான் ஹெச்டிஎப்சி வங்கியின் 39சதவீத கடன்கள் ரிசர்வ் வங்கியின் விதிப்படி வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையில்இணைக்கப்பட்டன. 53 சதவீத கடன்கள் அனைத்தும் எம்எல்சிஆர் அடிப்படையில் இணைக்கப்பட்டன.

கடந்த வாரம் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் தங்களின் எம்சிஎல்ஆர் வீதத்தை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.

எம்எல்சிஆர் என்றால் என்ன?

வங்கிகள் கொடுக்கும் டெபாசிட் வட்டி விகிதம், வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு கால அளவிலும் எந்தக் தொகையில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது அதனை அடிப்படையாக வைத்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வங்கிகள் முடிவெடுத்தன. இதற்கு கடன் விகித இறுதிநிலைச் செலவு(மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்) (எம்சிஎல்ஆர்) என்று பெயர். முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இப்போது எம்சிஎல்ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!