HDFC BANK SHARE:RBI REPO RATE: ரெப்போ ரேட்: ஹெச்டிஎப்சி வங்கி எம்எல்சிஆர் வட்டியை 25 புள்ளிகள் உயர்த்தியது

Published : May 09, 2022, 12:51 PM IST
HDFC BANK SHARE:RBI REPO RATE:  ரெப்போ ரேட்: ஹெச்டிஎப்சி வங்கி எம்எல்சிஆர் வட்டியை 25 புள்ளிகள் உயர்த்தியது

சுருக்கம்

HDFC BANK SHARE:RBI REPO RATE :ஹெச்டிஎப்சி வங்கி எம்எல்சிஆர்அடிப்படையிலான வட்டியை 25 புள்ளிகள் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது 7ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி எம்எல்சிஆர்அடிப்படையிலான வட்டியை 25 புள்ளிகள் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது 7ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி எல்எல்சிஆர் புள்ளிகளை உயர்த்தியுள்ளதையடுத்து, வீ்ட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி உயரும். கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணமும் அதிகரி்க்கும். 

இதற்கு முன் ஹெச்டிஎப்சி எம்எல்சிஆர் 6.9 சதவீதமாக இருந்தது, 25 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, இனி 7.15 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஆண்டுக்கான எல்எல்சிஆர் 7.50 சதவீதமாகவும், 2 ஆண்டு எம்எல்சிஆர் 7.60சதவீதமாகவும் இருக்கும். 3 ஆண்டு எம்எல்எசிஆர் 7.70சதவீதமாக இருக்கும்

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில்தான் ஹெச்டிஎப்சி வங்கியின் 39சதவீத கடன்கள் ரிசர்வ் வங்கியின் விதிப்படி வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையில்இணைக்கப்பட்டன. 53 சதவீத கடன்கள் அனைத்தும் எம்எல்சிஆர் அடிப்படையில் இணைக்கப்பட்டன. 

எம்எல்சிஆர் என்றால் என்ன?

வங்கிகள் கொடுக்கும் டெபாசிட் வட்டி விகிதம், வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு கால அளவிலும் எந்தக் தொகையில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது அதனை அடிப்படையாக வைத்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வங்கிகள் முடிவெடுத்தன.

இதற்கு கடன் விகித இறுதிநிலைச் செலவு(மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்) (எம்சிஎல்ஆர்) என்று பெயர். முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இப்போது எம்சிஎல்ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.

ரிசர்வ் வங்கி கடந்தவாரம் கடனுக்கான வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி, 4.40 சதவீதமாக உயர்த்தியது. இதையடுத்து, ஏராளமான வங்கிகள் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையில் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டியை உயர்த்தின. 

ஐசிஐசிஐ வங்கி கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தி 8.10 சதவீதமாகவும், பேங்க் ஆஃப் பரோடா வங்கி 6.90 சதவீதமாகவும் உயர்த்தியது.ஆர்பிஎல் வங்கியின் ரெப்போ ரேட் 9.50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது

ஹெச்டிஎப்சி வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டியை 30 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதனால் 6.7 சதவீதமாக இருந்த வட்டி 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று(9ம்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.தவிர பந்தன் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, ஜனா சிறு வங்கி,பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவையும் டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

நேற்று ரூ.800 குறைந்த தங்கம்.. இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நகை வாங்க இதுதான் சரியான நேரமா?
வட்டியிலேயே ரூ.2 லட்சம் வருமானமா? இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் உங்களுக்கு தெரியுமா?