ஒரே நாளில் சவரனுக்கு ரூ.248 உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

Published : May 31, 2019, 06:12 PM IST
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.248 உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 248 உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது தங்கம் விலை. இதனால் தங்கம் வாங்க சென்ற பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

அதன் படி, இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்

கிராம் ஒன்றுக்கு 23 ரூபாய் உயர்ந்து 3054 ரூபாயாக இருந்தது. பின்னர் மாலை நேர நிலவரப்படி, மீண்டும் 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 3062 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்க்கும் போது, இன்று ஒரே நாளில் கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்தும், சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து, 24 ஆயிரத்து 496 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

   

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ 39.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

இந்த தேதிக்குள் ஆதார் கார்டை அப்டேட் செய்தால்.. பணம் செலுத்த வேண்டாம்! முழு விவரம் இதோ
வட்டி விகிதத்தில் மேலும் தளர்வு.. சாமானிய மக்களுக்கு குட் நியூஸ் சொல்லுமா ரிசர்வ் வங்கி.?