
மீண்டும் அதிரடி உயர்வை கண்ட தங்கம் விலை...!
தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 29 ஆயிரத்தை நெருங்க உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
இன்று, காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ.3569.00 (11ரூபாய் அதிகரிப்பு ) சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போன்று வெள்ளி விலையும் உள்ளது. அதன் படி, கிராம் ரூ.47.50 (10 பைசா குறைவு) ரூபாயாக உள்ளது
ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 29 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.