இந்தியாவை தேடி வந்த பல கோடிகள்; உச்சம் பெறுமா இந்திய பங்குச் சந்தை!!

Published : May 03, 2025, 11:57 AM IST
இந்தியாவை தேடி வந்த பல கோடிகள்; உச்சம் பெறுமா இந்திய பங்குச் சந்தை!!

சுருக்கம்

இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்த வாரம் ரூ. 10,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர்.

Investment in India:

இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்த வாரம் ரூ. 10,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய பங்குச் சந்தை மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்து முதலீடு செய்வது தெளிவாகிறது. 
தேசிய பத்திரங்கள் வைப்பு நிறுவனம் (NSDL) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 28 மற்றும் மே 2 க்கு இடையில் FPIகள் பங்குகளில் ரூ. 10,073 கோடியை முதலீடு செய்துள்ளன.

2025 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு அதிகரித்து இருப்பதாக அந்த அறிக்கை காட்டுகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்திய பங்குகளில் FPIகளின் நிகர முதலீடுகள் ரூ. 4,223 கோடியாக இருந்தது. இது வெளிநாட்டு முதலீட்டுப் போக்குகளில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. முந்தைய மாதங்களில் NSDL தரவு, மார்ச் மாதத்தில் FPIகள் ரூ. 3,973 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றதாக தெரிய வந்தது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், NSDL மற்றும் FPI முறையே ரூ. 78,027 கோடி மற்றும் ரூ. 34,574 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.

புதிய இந்திய பொருளாதார நம்பிக்கை:

இந்திய பங்குச் சந்தையில் இருந்து பல மாதங்கள் வெளியேறி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தர்போத்சு இந்திய பங்குச் சந்தை மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்து வருகின்றனர். இது, இந்தியப் பொருளாதாரத்தில் புதிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இருப்பினும், வலுவான வருகை இருந்தபோதிலும், வாரம் முழுவதும் ஒட்டுமொத்த சந்தை மனநிலை பலவீனமாகவே இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் முதலீட்டாளர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, FPI முதலீடுகளின் நேர்மறையான தாக்கத்தைக் குறைத்தது.

வெள்ளிக்கிழமை உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தை:
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் ஆர்வம் காட்டினாலும், உள்நாட்டு நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் சந்தைகளை அழுத்தத்தின் கீழ் வைத்திருக்கின்றன. பல முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் மற்றும் நடந்து வரும் எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் அணுகுமுறையை கவனித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் நேர்மறையான முடிவில், நிஃப்டி 24,300க்கு மேல் நிலையற்ற அமர்வில் முடிந்தது. நிறைவில், சென்செக்ஸ் 259.75 புள்ளிகள் அல்லது 0.32 சதவீதம் உயர்ந்து 80,501.99 ஆகவும், நிஃப்டி 12.50 புள்ளிகள் அல்லது 0.05 சதவீதம் உயர்ந்து 24,346.70 ஆகவும் முடிந்தது.

புவிசார் அரசியல் அபாயங்கள் இல்லாத நிலையில், ஒட்டுமொத்த நேர்மறையான உலகளாவிய மனநிலை உள்நாட்டு சந்தைகளில் நல்ல  நகர்வை ஆதரித்திருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். வங்கி மற்றும் சந்தை நிபுணர் அஜய் பாக்கா ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியில், "இந்திய சந்தைகள் இப்போது இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தில் சிகியுள்ளது. இல்லையெனில் இந்திய சந்தைகள் நல்ல உலகளாவிய பாசிடிவ் போக்கு மற்றும் நீடித்த உள்நாட்டு ஆதரவுடன் முன்னேறத் தயாராக உள்ளன" என்று கூறினார். 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?