
தங்கம் விலைதொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாயும், சவரனுக்கு 72 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,115ஆகவும், சவரன், ரூ.40,920ஆகவும் இருந்தது.
தங்கம் விலை கொஞ்சூண்டு குறைவு! நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல்! நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூ.5,124ஆகவும், சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து ரூ.40 ஆயிரத்து 992ஆக ஏற்றம் கண்டுள்ளது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,124க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 2நாளாக உயர்ந்து, சவரன் ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 400 அதிகரித்த நிலையில் இன்று கூடுதலாக 72 உயர்ந்துள்ளது.
தங்கம் நகை விலை சவரன் ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது, நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினர், நகைவாங்க நினைப்போருக்கும் பெரும் வருதத்ததை ஏற்படுத்தியுள்ளது.
தங்கப் பத்திரம் சிறந்ததா, கோல்ட் இடிஎப் லாபமானதா? முதலீட்டுக்கு எது சரியான தேர்வு?
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.74.70 ஆகவும், கிலோ ரூ.74,700 ஆக மாறாமல் உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.