பெரிய   எதிர்பார்ப்பில்   பிப்ரவரி  1  ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் ..!!! புதிய திட்டம் வெளியாக வாய்ப்பு ...!!!

 
Published : Jan 03, 2017, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
பெரிய   எதிர்பார்ப்பில்    பிப்ரவரி  1  ஆம் தேதி  மத்திய பட்ஜெட் தாக்கல் ..!!! புதிய திட்டம்  வெளியாக  வாய்ப்பு ...!!!

சுருக்கம்

பெரிதும்   எதிர்பார்க்கப்பட்ட   மத்திய பட்ஜெட்  பிப்ரவரி  1  ஆம் தேதி தாக்கல் ....

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் மத்திய  பட்ஜெட், பிப்ரவரி  1  ஆம்  தேதி   தாக்கல்  செய்யப்பட உள்ளதாக   மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது  தொடர்பாக ,  மத்திய  உள்துறை  அமைச்சர்  ராஜ்நாத் சிங் தலைமையில்  அமைச்சரவை  கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , 2017 ஆம் ஆண்டிற்கான ,  மத்திய   பட்ஜெட்டானது ,  பிப்ரவரி  1  ஆம் தேதி தாக்கல்   செய்யப்படும்  என  முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த  துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது  என  முக்கிய முடிவுகளை  எடுக்கும்  விதமாக,  இம்மாதம் இறுதியில் , அதாவது ஜனவரி  31  ஆம் தேதி, பாராளுமன்ற  பட்ஜெட் கூட்ட தொடரை கூட்ட  முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே பட்ஜெட்டுக்கு என்று தனி பட்ஜெட் இல்லாமல், மத்திய  பட்ஜெட்டின்  ஒரு பகுதியாக தான்  ரயில்வே பட்ஜெட்  இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய்  நோட்டு செல்லாது  என  அறிவித்த பின்பு, இந்த ஆண்டு  தாக்கல்  செய்யப்படும்  முதல் பட்ஜெட் இது என்பதால், பல  கூடுதல் சலுகைகள்  இடம் பெறலாம்  என  எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
இன்ஜெக்‌ஷன் தேவையில்லை.. சிப்லாவின் Afrezza இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்