
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), நாடு முழுவதும் உள்ள 1,150க்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்களில் ‘FASTag வருடாந்திர பாஸ்’ வசதியை அறிமுகப்படுத்தியது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடங்கிய இந்த சிறப்பு பாஸ், பயணிகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரே நாளில் 1.4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பாஸை வாங்கியுள்ளனர். இந்த அபூர்வமான வரவேற்புக்குப் பிறகு, NHAI புதிய டோல் கட்டண மாற்றத்தை அறிவித்துள்ளது.
நவம்பர் 15 முதல்
புதிய அறிவிப்பின்படி, FASTag இல்லாத வாகனங்கள் UPI அல்லது பிற டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்தினால், இனி முழு டோல் கட்டணத்தின் 1.25 மடங்கு மட்டும் வசூலிக்கப்படும். இது 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும். இதுவரை FASTag இல்லாதவர்கள் ரொக்கமாக செலுத்தும்போது இரண்டு மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.
UPI பரிவர்த்தனைகள்
பல பயணிகள் FASTag இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட்களை மட்டுமே நம்பி டோல் கட்டணங்களை செலுத்துகிறார்கள். இப்போது UPI பயன்படுத்தும் பயணிகளின் நிதிச் சுமை குறைக்கப்பட்டுள்ளது. FASTag இல்லாதவர்களுக்கு அதிகமான அபராதம் இல்லாமல், கட்டணத்தை குறைத்து செலுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இதை உதாரணத்துடன் விளக்கியுள்ளது.
இது டிஜிட்டல் பேமெண்டை ஊக்குவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
பயண அனுபவத்தை மேம்படுத்தும் திருத்தம்
இந்த மாற்றம் பயணியைச் சுலபமாக்குவது மட்டுமின்றி டோல் பிளாசாக்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க உதவும். பணம் கையாளும் பிரச்சினைகள், தாமதங்கள், தவறான வசூல் போன்றவை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் இந்தியா
அமைச்சகத்தின் விளக்கப்படி, 2008-ல் உருவாக்கப்பட்ட டோல் விதிகளில் செய்யப்பட்ட இந்தத் திருத்தம், டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவித்து, டோல் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளின் ஒட்டுமொத்த வசூல் மேம்படுத்தும். இது டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.