முன் கூட்டியே பட்ஜெட் அறிவிப்பால், தேர்தல் பாதிக்காது ....அருண் ஜெட்லி விளக்கம் ...!

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 06:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
முன் கூட்டியே பட்ஜெட் அறிவிப்பால், தேர்தல் பாதிக்காது ....அருண் ஜெட்லி விளக்கம் ...!

சுருக்கம்

முன்கூட்டியே பட்ஜெட்  அறிவிக்க  மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், அடுத்த ஆண்டு  தொடக்கத்தில்  நடைபெற உள்ள, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் என ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பாதிக்காது  என மத்திய நிதியமைச்சர்  அருண்  ஜெட்லி  தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே பட்ஜெட் அறிவிக் கப்படுவதற்கு முக்கிய காரணம் பட்ஜெட் தொடர்பான அனைத்து விவாதங்களும், ஒப்புதல் களும் நிறைவுபெற்று அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே ஏப்ரல் 1-ம் தேதி அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டுவந்துவிட வேண்டும்  என்பதற்காகத்தான்.

இதனை  தொடர்ந்து, . பட்ஜெட் தொடர்பான அனைத்து விவாதங்களையும் மார்ச் 24-ம் தேதிக்குள் முடிக்கவும் திட்ட மிட்டிருந்தது.ஏனென்றால் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும் நாட்களில்  வர  உள்ளதால், தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குப் பதிவுக்கு இடையூறு ஏற்படும் என மத்திய அரசு கருதுகிறது. எனினும் மாநில தேர்தல்கள் நடைபெறும் நேரத்தில் பட்ஜெட் அறிவிப்பு குறுக்கிடாது  என்றும்  மத்திய நிதியமைச்சர்  அருண்  ஜெட்லி  தெரிவித்துள்ளார்.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Chicken : ஜூலை 31 முதல் தமிழகத்தில் சிக்கன் கிடைக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
முடிவுக்கு வரும் 10, 20 ரூபாய் தாள்களின் அத்தியாயம்.. கலர் கலராக அறிமுகமாகும் பிளாஸ்டிக் நோட்டுகள்..