
சவரன் ரூ.25,000 ஆயிரத்தை கடந்தது..! பொதுமக்கள் அதிருப்தி.!
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்
கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய் உயர்ந்து 3142 ரூபாயாக உள்ளது .அதன் படி பார்க்கும் போது, சவரனுக்கும் 152 ரூபாய் உயர்ந்து, 25 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலையில் தொடர் ஏற்றம் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை நிலவரம்..!
கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ 40.30 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.