20 லட்சம் விவசாயிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்... பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!

Published : Feb 01, 2020, 12:07 PM IST
20 லட்சம் விவசாயிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்... பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1-ம் தேதிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017-ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1-ம் தேதிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017-ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

சிறப்பு அம்சங்கள்;- 

* ஜிஎஸ்டி வரியால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 4% செலவு குறைகிறது. 

* கடந்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் புதிய வரிசெலுத்துவோர் உருவாகியுள்ளனர். 

* ஏழைகள் நேரடியாக பன்பெறும் வகையில் ஏராளமான புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். 

* வரி கணக்கு செலுத்த வரும் ஏப்ரல் மாதம் முதல் எளிய முறை அறிமுகப்படுத்தப்படும்.

*  40 கோடி வருமான வரி கணக்கு நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

*  உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது

* 2022-க்குள் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு செய்யப்படும்.

* வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* விவசாயம் தொடர்பான 3 சட்டங்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். 

* வேளாண்துறையை முன்னேற்ற 16 கட்டங்களாக திட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

*  பண்ணை தொழிலை தனியார் நிறுவனங்கள் நடத்தும் விதமாக மறுசீரமைப்பு செய்யப்படும். 

* உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 100 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

* சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும். 

* தரிசு நிலங்கயில் சூரிய மின்னுற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

* தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

* விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

* தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்

* 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.

* அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்த நடவடிக்கை

* மாவட்ட வாரியாக தோட்டகலைத்துறை பொருட்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம்.

*  விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 6.11 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்

* விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து மக்களுக்குமான பொருளாதார வளர்ச்சி,  சமூக நலன்,இலக்கு ஆகிய கொள்கைகள் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

8th Pay Commission: சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
வேலைக்கே போக வேண்டாம்.. மாதம் ரூ.9250 வழங்கும் அரசு ஸ்கீம்.. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?