Sept 29-Oct 5 This Week Rasi Palan: மகர ராசி நேயர்களே.! இந்த வாரம் நீங்க அடிக்கிற பால் எல்லாம் சிக்ஸர் தான்.!

Published : Sep 28, 2025, 04:23 PM IST
magara rasi this week rasi palan

சுருக்கம்

This Week Rasi Palan: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் அணுகுமுறையில் விவேகமும், நிதானமும் காணப்படும். எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடினமான சவால்களை கூட எளிதாக சமாளிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் புகழும், மதிப்பும் உயரும். பெரியவர்களின் பரிபூரண ஆசியைப் பெறுவீர்கள்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. சீரான உணவுப் பழக்கம் மற்றும் உறக்கத்தை பின்பற்றுவது நல்லது. அதிக வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படலாம். எனவே அவ்வப்போது ஓய்வு எடுப்பது அவசியம். யோகா அல்லது தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை தாமாகவே சரியாகிவிடும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் குறித்து திட்டமிடுவீர்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களை அடைக்க அல்லது அதற்கான வழிகளை காண்பதற்கு இந்த வாரம் சாதகமானதாக அமையும்.

கல்வி:

மாணவர்களுக்கு இந்த வாரம் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சிகள் மற்றும் திட்டங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும், திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தி படிப்பவர்கள் வெற்றியை ஈட்டுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரம்:

வேலையில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்கள் கிடைக்கும். பணிச்சுமை இருந்தாலும் அதை சிறப்பாக முடிப்பீர்கள். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வியாபார ஒப்பந்தங்கள் உறுதியாகும். எதிரிகள், போட்டியாளர்கள் தொழிலில் இருந்து விலகுவதால் லாபம் இரட்டிப்பாகும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பது மனதிற்கு திருப்தி தரும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, உறவு வலுப்படும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பது குறித்து பேசுவீர்கள் அல்லது அதற்கு தயாராவீர்கள்.

பரிகாரம்:

  • தினமும் காலை அல்லது மாலை வேளையில் விநாயகர் பெருமானை வழிபடுவது நல்லது.
  • அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
  • கருப்பு எள் அல்லது கருப்பு உளுந்து ஆகியவற்றை தானமாகக் கொடுக்கலாம். 
  • ஏழை எளியவர்களுக்கு உணவு அல்லது உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Astrology டிசம்பர் 23: இன்றைய ராசி பலன்.! உங்கள் காட்டில் இன்று பணமழை.! வெற்றிகளும் குவியப்போகுது.!
Astrology: படமெடுத்து ஆட்டமாய் ஆடப்போகும் ராகு.! ஏற்றம் காணப்போகும் 4 ராசிகள்.! தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம்.!