
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் புதிய உயரங்களைக் காண்பீர்கள். நீங்கள் எடுக்கும் காரியங்களை விடாமுயற்சியுடன் முடிப்பீர்கள். சகோதரர் வழியில் ஆதாயம் மற்றும் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
வருமானம் திருப்திகரமாக இருக்கும். ராகுவின் நிலை காரணமாக தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பழைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுப காரியங்களுக்காக சிறு தொகையை செலவிட நேரிடலாம்.
இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். குருவின் பார்வையால் நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண பேச்சுக்கள் சமூகமாக முடியும். கண், வயிறு தொடர்பான சில உபாதைகள் தோன்றி மறையலாம். எனவே உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.
வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி தாயாரை வழிபடலாம். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது செல்வ சேர்க்கையைத் தரும். ஏழை எளியவர்கள் அல்லது முன் களப்பணியாளர்களுக்கு உணவு வழங்குவது தோஷங்களை நீக்கும்.
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.