தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆட்டுக் குட்டிகளுக்கு எப்படிப்பட்ட தீவனத்தை கொடுக்கலாம்…

Asianet News Tamil  
Published : Oct 12, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆட்டுக் குட்டிகளுக்கு எப்படிப்பட்ட தீவனத்தை கொடுக்கலாம்…

சுருக்கம்

What kind of feed can be given to lambs separated from their mother ...

** குட்டிகளைப் பொதுவாக மூன்று மாத வயதில் தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். தாயிழந்த அல்லது தாயால் ஒதுக்கப்பட்ட (அநாதை) குட்டிகளும் உண்டு.

** பால் குடிக்கும் இளங்குட்டிகள், தாயிடமிருந்து விரைவிலேயே பிரிக்கப்பட்டவை, அநாதை குட்டிகளுக்கும் நன்றாகத் தீவனமளிக்க வேண்டும்.

** ஆறு வார வயது வரை, குட்டிகளுக்குத் தானியங்களை உடைத்துத் தான் தர வேண்டும். கடினத் தோலுடைய தானியங்களைத் தவிர்த்து மற்றவை பின் நாட்களில் அப்படியே வழங்கப்படலாம்.

** தானியங்களுடன் இவற்றுக்குத் துண்டாக்கப்பட்ட நல்ல பசும்புல் அல்லது பயிறு வகை உலர் புல்லும் அளிக்கப்பட வேண்டும்.

** பயிறு வகை உலர் புல் அல்லது தரமான மேய்ச்சல் இல்லாத போது, வெறும் குறைவான நார்த்தீவனம் மட்டுமே கிடைக்கும் சமயங்களில் தானிய  தீவனத்துடன் புரதமும் உயிர்ச்சத்துக்களும் ஏறக்குறைய 12சதவிகித செரிமான கச்சா புரதமும் கிடைக்குமளவில் சேர்க்க வேண்டும்.

** நார்த்தீவனம் மற்றும் அடர்த்தீவனம் இரண்டும் கலந்த தீவனத்தை முழுவதுமாகவே குறுணை வடிவமாக்கிக் கொடுத்தல் இலாபகரமானது. இதன் மூலம் குட்டிகள் நிறைய தீவனம் உட்கொள்வதோடு, விரைவில் வளரவும் வழி செய்கிறது.

** குருணைகளில் ஊட்டச்சத்துக்களைத் தேவைக்கேற்ற அளவில் எளிதில் சேர்த்துக் கொள்ள முடிவதோடு, குட்டிகள் தானாகவே உட்கொள்ளக் கூடியதாகவும் உள்ளதால், மொத்தமாக தீவனம் உட்கொள்ளும் அளவை ஏறக்குறைய நிலையானதாக மாற்ற முடியும்.

** குருணைகளில், ஆரம்பத்தில் நார்ச்சத்தானது 65லிருந்து 70 சதவிகிதம் உள்ளது. பின்னர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 10லிருந்து 12 வார வயதில், 50சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!