ஆடுகளின் சினைக்காலத்திற்கு முன்னும், நடுவிலும் எப்படிப்பட்ட தீவனத்தைக் கொடுக்கலாம்?

Asianet News Tamil  
Published : Oct 11, 2017, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
ஆடுகளின் சினைக்காலத்திற்கு முன்னும், நடுவிலும் எப்படிப்பட்ட தீவனத்தைக் கொடுக்கலாம்?

சுருக்கம்

What kind of feed can be given before and before the goat of the sheep?

** சினைக் காலத்தில் நல்ல தீவனமளித்தல்தான் நல்ல குட்டி ஈனுதலின் திறவு கோலாகும். தீவனமளித்தல் போதாமலும், குறையுள்ளதாகவும் இருப்பின், நலிந்த இறந்த குட்டிகள் பிறக்க வாய்ப்புண்டு.

** பலமுள்ள ஆரோக்கியமான உயிருள்ள குட்டிகளின் ஈனும் எண்ணிக்கையை இது அதிகரிக்கும்.

** பெட்டைகளின் உற்பத்தி வாழ்நாளை நீட்டிக்கும். பெட்டைகளின் பால் உற்பத்தி அளவை அதிகரித்து அதன் மூலம் ஆரோக்கியமான குட்டிகளைப் பெற முடியும்.

** மேலும் இது கம்பள உற்பத்தியையும் அதிகரிக்கின்றது. குட்டிகளில் முடக்குவாதத்தின் நிகழ்வைக் குறைக்கிறது.

** பெட்டைகள் உடல் சோர்வு மற்றும் தளர்வினால் குட்டிகளை ஒதுக்கும் வாய்ப்பும் குறைகிறது. பெட்டைகளுக்கு இந்த தருணத்தில் பரிந்துரைக்கப்படும் தீவனக் கலவை

** ஒன்றிலிருந்து இரண்டு கிலோ சோளப் பதனப் பசுந்தீவனத்துடன் பயிறுவகை உலர் புல்அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வீதம் - ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு.

** ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு மக்காச் சோளம் அல்லது சோளப் பசுந்தீவனம் வேண்டுமளவும், கடலைப் பிண்ணாக்கு போன்ற பிண்ணாக்கு வகைகள் 50 கிராம், கொடுக்க வேண்டும்.

** அறுவடைக்குப் பின் எஞ்சி இருக்கும் நிலங்களில் ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு மேய்ச்சலுடன் 100 கிராம் பிண்ணாக்கு.

 

PREV
click me!

Recommended Stories

விவசாயிகளுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம்.?! வேளாண்துறைக்கு அள்ளிக் கொடுக்க போகும் தமிழக அரசு.! யாருக்கும் தெரியாத பட்ஜெட் சீக்ரெட்.!
Terrace Garden : மாடித்தோட்டத்தில் எளிதாக வளர்க்கக்கூடிய 5 காய்கறிகள்!