தக்காளி சாகுபடியில் நல்ல மகசூல் பெற என்னவெல்லாம் செய்யலாம்...

 
Published : Jun 04, 2018, 02:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
தக்காளி சாகுபடியில் நல்ல மகசூல் பெற என்னவெல்லாம் செய்யலாம்...

சுருக்கம்

What can be done to get good yield on tomato cultivation

தக்காளி சாகுபடி...

நடவு முறை

சரியான ஈரப்பதத்தில் தோட்டத்தை உழவு செய்யவேண்டும். 3 அல்லது 4 முறை உழவு செய்து 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும். பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும். 

கடைசி உழவுக்கு முன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம். நடவுக்கு முன் தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.

60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும். 

நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன்பிறகு மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

பூச்சித் தாக்குதல்

இலைச்சுருட்டு நச்சுயிரி நோய் தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். 

இலைப்பேன் தாக்குதல் தக்காளியில் புள்ளி வாடல் நோயினைப் பரப்பும் காரணியாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 7 கிலோ ப்யூரடான் குறுணையை இடவேண்டும். 

வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும். பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் தெளிக்கவும். பூச்சி தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும். 

புள்ளியிட்ட அழுகல் வைரஸ் தடுக்க 10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.

மகசூல்

முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்கவிடக் கூடாது. இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்யவேண்டும். 

இந்த ஆலோசனைகளைப் பின்பற்றி இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.


 

PREV
click me!

Recommended Stories

Training For Farmer: லட்சங்களில் வருமானம் தரும் தக்காளி சாஸ், ஜாம் உற்பத்தி! தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க
Agriculture: ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருமானம் பெறலாம்.! விவசாயிகளை கை தூக்கி விட சந்தைக்கு வந்துள்ள ரகசிய "எந்திரன்".!