கோடைப்பட்டத்தில் நல்ல வருவாய் வேண்டுமா? அப்போ இதை சாகுபடி செய்யுங்கள்..

 
Published : Apr 27, 2017, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
கோடைப்பட்டத்தில் நல்ல வருவாய் வேண்டுமா? அப்போ இதை சாகுபடி செய்யுங்கள்..

சுருக்கம்

Want a good income on the summer So lets cultivate this.

கோடைப்பட்டத்தில் நல்ல வருவாயினைத் தருவது பிஞ்சு வெள்ளரி. இதனை சாகுபடி. செய்துசிறு விவசாயிகளுக்கு நல்ல வருவாய் பெறலாம். இந்த சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர்தான் செய்ய இயலும்.

பிஞ்சு வெள்ளரி சாகுபடி

** பிஞ்சு வெள்ளரி சாகுபடி என்பது வெள்ளரிக்காய் பிஞ்சாக இருக்கும்போதே அறுவடை செய்து விற்று பயன்பெறும் தொழிலாகும்.

** இதன் வயது 90 நாட்கள்.

** பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாகி அதிக விதைகளைக் கொண்டிருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது.

** மிகச்சிறிய பிஞ்சுகள், நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச்சுவை கொ\ண்டதாக இருக்கும். ஒரு விதைகூட காயில் இருக்காது.

** இத்தகைய காய்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.10 கொடுத்து வாங்கி பின்னால் தாங்கள் காய்களை கிலோ ரூ.15 வரை விற்கின்றனர்.

** இரண்டாம் தரக் காய்கள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். இதன் விலை கிலோ ரூ.10 வரை இருக்கும்.

சாகுபடி செய்வது எப்படி?

** விவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு செய்துவிட்டு நிலத்திற்கு மூன்று டிரெய்லர் லோடு மக்கிய தொழு உரத்தை இட்டு அதனை வயல் பூராவும் மண்ணோடு சீராக கலக்க உழுதுகொள்கிறார்.

** பிறகு ஏக்கரில் 600 குழிகள் போட்டுக்கொள்கிறார். நிலத்திற்கு அடியுரமாக ஒன்று – ஒன்றரை மூடை பேக்ட் அம்மோபாஸ் உரத்தைப் போட்டு மண்ணோடு கலக்குகிறார்.

** நிலத்திலுள்ள குழிகளில் இயற்கை உரமும் ரசாயன உரமும் உள்ளது.

** உடனே குழிக்கு மூன்று விதைகள் விதைத்து தண்ணீர் ஊற்றுகிறார்.நிலத்திலுள்ள குழிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடுகிறார்.

** இவ்வாறு 15 நாட்கள் செய்துவிட்டு பிறகு நிலத்தில் கால்வாய் போட்டு பாசனம் செய்கிறார்.

** குழிகள் அனைத்திற்கும் ஏக்கருக்கு ஒன்று – ஒன்றரை மூடை பாரமாபாஸ் 20:20 உரம் இடுகிறார்.

** குழிகளில் களைச்செடிகளை குச்சிகள் உபயோகித்து அகற்றுகிறார்.

** செடிகள் நன்கு பூக்கள் பிடித்து காய்கள் காய்க்கத் தொடங்கும். சாகுபடி சமயம் விவசாயி தனது பயிரினை பூச்சிகள், பூஞ்சாளங்கள் தாக்காமல் இருக்க தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்கிறார்.

** பிஞ்சு வெள்ளரி பயிரின் மொத்த வயது 90 நாட்கள்.

** இந்த சாகுபடியில் பயிரில் விதைத்த 45வது நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடையில் கீழ்க்கண்டபடி வருமானம் கிட்டுகின்றது.

** இதனால் லாபம் மட்டுமே 25 ஆயிரம் கிடைக்கும்.

 

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?