எண்ணெய்ப் பயிர் வித்துகளின் முளைப்புத் திறனை பாதுகாக்க இதை செய்தாலே போதும்...

 
Published : Jun 06, 2018, 03:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
எண்ணெய்ப் பயிர் வித்துகளின் முளைப்புத் திறனை பாதுகாக்க இதை செய்தாலே போதும்...

சுருக்கம்

This is enough to protect the germination of oilseeds.

எண்ணெய் பயிர் வித்துகளின் முளைப்புத் திறனை பாதுகாக்க வேண்டும் என்றால் நன்றாக உலர வைத்தாலே போதும்.

விவசாயிகள் பயிர் அறுவடைக்குப் பின் விதைகளை வெயிலில் காயவைத்து சேமித்து வைத்து அடுத்த பருவத்தில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த முறையில் நெல், சிறுதானியங்கள், பயிர் வகைகளின் முளைப்புத் திறனை விட மணிலாவின் முளைப்புத் திறன் குறைந்து காணப்படுகிறது.

எண்ணெய் பயிர் வித்துகளின் விதைகளை தேவைக்கு அதிகமாக வெயிலில் காய வைப்பதாலும், அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் சேமித்து வைப்பதாலும் முளைப்புத் திறன் பாதிக்கப்படுகிறது. 

அதோடு ஈரப்பதம் அதிகரிப்பால், பூச்சிகள், பூஞ்சாண நோய் தாக்குதலால் பயிர் இழப்பு, உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படுகிறது.

எனவே, எண்ணெய் பயிர் வித்துகளை சேமித்து வைக்கும் விவசாயிகள், விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் 9 சதவீத ஈரப்பதத்துக்கு குறையாமல் பாதுகாக்கலாம். 
 
இந்த நடைமுறைகளை கடைப்பிடித்து எண்ணெய் வித்துகளின் விதைகளை பாதுகாப்பதோடு அவற்றின் முளைப்புத் திறன் சரியாக உள்ளதா என்பதையும் அறிந்து விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெறலாம்.


 

PREV
click me!

Recommended Stories

Training For Farmer: லட்சங்களில் வருமானம் தரும் தக்காளி சாஸ், ஜாம் உற்பத்தி! தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க
Agriculture: ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருமானம் பெறலாம்.! விவசாயிகளை கை தூக்கி விட சந்தைக்கு வந்துள்ள ரகசிய "எந்திரன்".!