நடவு செய்த பயிர்களை இப்படியெல்லாம் பாதுகாக்கலாம்... 

Asianet News Tamil  
Published : Jun 27, 2018, 02:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
நடவு செய்த பயிர்களை இப்படியெல்லாம் பாதுகாக்கலாம்... 

சுருக்கம்

Planting crops can be preserved like this ...

நடவு செய்த பயிர்களை பாதுகாக்க...

** புழுக்களை தின்னும் பறவைகள் நிற்பதற்காக ஒரு ஏக்டருக்கு, 10 பறவை நிற்கும் குச்சிகளை வைக்க வேண்டும்.

** தத்து பூச்சி, அசுவனி மற்றும் வெள்ளை ஈ போன்றவற்றை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 2-3 டெல்டா மற்றும் மஞ்சள் ஒட்டும் பொறியை வைக்க வேண்டும்.

** உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிராக, இரண்டிலிருந்து மூன்று 5% வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்க வேண்டும்.

** வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பதன் மூலம், துளைப்பான் பாதிப்பையும் குறைக்க முடியும். வேப்ப எண்ணெய் (2%) கரைசல் அளிப்பதன் மூலம் துளைப்பான் பாதிப்பை குறைக்கலாம். 

** இலை தத்து பூச்சி மற்றும் ஏனைய உறிஞ்சும் பூச்சின் எண்ணிக்கை பொருளாதார சேதத்தை உண்டாக்கும். அளவுக்கு மேல் இருப்பின், ஒரு ஹெக்டருக்கு 150 மில்லி, இமிடாகோலோபிரிட் 17.8 SL தெளிக்க வேண்டும்.

** தண்டு மற்றும் காய் துளைப்பான் (Leucinodes orbonalis) மொத்தமாக பிடிப்பதற்கு ஒரு எக்டருக்கு 5 என்ற வீதத்தில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். 15-20 நாள் இடைவெயியில் கவரும் பொருளை (லூர்) மாற்ற வேண்டும்.

** தண்டு மற்றும் காய் துளைப்பானை கட்டுப்படுத்த, வார இடைவெளியில், 4-5 முறை முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா பிரசிலியன்சிலை 1-1.5 இலட்சம்/ஹெக்ட்ர் என்ற அளவில் வெளியிட வேண்டும்.

** நூற்புழு மற்றும் துளைப்பான் சேதத்தை கட்டுப்படுத்த, செடிகளின் வரிசையில், ஒரு ஹெக்டருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கை (இரண்டு தடவையாக- நட்ட 25 மற்றும் 60 நாட்கள் கழித்து) மண்ணில் இட வேண்டும். 

** காற்று வேகமாக அடிக்கும் போதோ அல்லது வெப்பம் 300 செல்சியசிற்கு மேல் இருக்கும் போது, வேப்பம் புண்ணாக்கு அளிக்க கூடாது.

** துளைப்பானால் பாதிக்கப்பட்ட தண்டுகளை மற்றும் காய்களை சேகரித்து, அழிப்பதன் மூலமும் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

** துளைப்பானின் பாதிப்பு பொருளாதார சேத நிலையை (5% பாதிப்பு) கடக்கும் நிலையில் பின்வருவனவற்றை அடிக்கலாம். சைபர் மெத்திரின் 25 EC - 200 கிராம் a.i/ எக்டர் (0.0005%) கார்பரில் 50 WP - 3 கிராம்/ஒரு லிட்டர் நீரில்

** திரும்ப திரும்ப கத்திரி பயிரிடுவதலாலும், துளைப்பான் பாதிப்பு அதிகம் இருக்கலாம். எனவே கத்திரி குடும்பத்தில் சேராத பயிர்கொண்டு, பயிர் சுழற்சியை மேற்கொள்ளலாம்.

** ஹட்டா வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் வண்டுகளை அவ்வப்போது முறையாக சேகரித்து அழிக்க வேண்டும்.

** சரியான இடைவெளியில் சிற்றிலை நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை நீக்க வேண்டும்.

** பாக்டிரியா வாடல் நோயைக் கட்டுப்படுத்த முறையாக பசுந்தாள் உரம், பாலீதீனால் முடாக்கு மற்றும் பிளிசிங் பவுடர் மண்ணில் இடலாம்.

PREV
click me!

Recommended Stories

PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் கிடைக்குமா? வைரல் மெசேஜின் உண்மை இதுதான்!
Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!