நிலக்கடலையில் அதிக மகசூல் பெற இந்த தொழில்நுட்பம் உங்களுக்கு நிச்சயம் உதவும்...

First Published Dec 16, 2017, 12:39 PM IST
Highlights
methods for getting high yields in groundnut


 

எண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற உதவும் தொழில்நுட்பம் 

** விதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் (கடலை) 3 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 3 பாக்கெட்டை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும். 

** விதைப்புக்கு முன், ஒரு ஏக்கருக்கு 5 கிலோ கடலை நுண்சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். பயிருக்கு தேவையான பேரூட்டச் சத்துக்களுடன், நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம். 

** ஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும், அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும். 

** மேலுரமாக இடும்போது, வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும். இதனால் மண் பொலபொலவென இருப்பதால், விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும். 

** காய்கள் முற்றி, தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும், எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.

** பூ, பிஞ்சு உதிர்வதை தடுக்க, பயிர் பூக்கும் தருணத்தில் 75 நாள்கள் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும். 

** இரண்டு கிலோ டி.ஏ.பி. உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து, மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து, அதிகமான மகசூல் பெறலாம்.

click me!