பூச்சிவிரட்டி கரைசல் தயாரிக்கும் முறைகள்...

Asianet News Tamil  
Published : Nov 08, 2016, 06:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
பூச்சிவிரட்டி கரைசல் தயாரிக்கும் முறைகள்...

சுருக்கம்

கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ, மேற்கண்ட இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.

1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து, கரைசலை பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டியில் தயாரிக்க வேண்டும். நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.

மூடி வைக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும்.

அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

இலைகளில் கரைசலின் நாற்றம் இருந்து கொண்டு இருக்கும். எனவே பூச்சிகள் நெருங்காது.

ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக குலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

இவ்விதம் தயார் செய்த பூச்சி விரட்டிக் கரைசலின் மூலம் பெரும்பாலான பூச்சிகளை விரட்டி விடலாம்

PREV
click me!

Recommended Stories

Succulent Plants: உங்க வீட்டுக்கு ஒரு Luxury Villa லுக் வேண்டுமா? இந்த 5 செடிகளை வையுங்க!
Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!