குட்டி பெறும் காலத்தில் பெட்டை ஆடுகளுக்கு இந்தமாதிரி தீவனங்களைதான் கொடுக்கணும்…

 
Published : Oct 11, 2017, 11:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
குட்டி பெறும் காலத்தில் பெட்டை ஆடுகளுக்கு இந்தமாதிரி தீவனங்களைதான் கொடுக்கணும்…

சுருக்கம்

In the time of the baby arrival the pet will give such sheep to the sheep.

** குட்டி பெறும் காலம் நெருங்கும் தருவாயில், தீவனத்தில் தானியங்களின் அளவை வெகுவாகக் குறைத்து, நல்ல தரமான உலர்புல் தீவனத்தை போதுமான அளவு அளித்தல் வேண்டும்.

** குட்டி ஈன்ற பின், பெட்டைகளின் தீவன அளவைப் படிப்படியாக அதிகரித்து, தீவனமளிப்பதை ஒரு நாளைக்கு ஆறிலிருந்து ஏழு முறையாகப் பிரித்து, அதன் மூலம் தேவையான முழுத் தீவனத்தை யும் அடையுமாறு செய்ய வேண்டும்.

** பொதுவாக, எளிதில் செரிக்கக்கூடிய தீவன மூலம் பொருட்களை கன்று ஈன்ற முதல் சில நாட்களிலேயே தீவனத்தில் சேர்க்க வேண்டும்.

** கோதுமைத் தவிடு மற்றும் பார்லி அல்லது ஓட்ஸ் அல்லது மக்காச் சோளம் 1:1 என்ற விகிதத்தில் சேர்த்தல் நல்லது.

** குட்டி ஈன்ற உடனேயே, பெட்டை ஆட்டிற்குப் போதிய அளவு மிதமான வெந்நீர் அளிக்க வேண்டும்.

** முதல் கட்டி ஈன்ற  பொழுதே, குட்டிகளுக்கான ஆரம்ப காலத் தீவனத்தை கணக்கிடத் துவங்கி விட வேண்டும்.

** ஒரு நிறைவான ஆரம்ப காலத் தீவனமென்பது, 16 பாகங்கள் வேர்க்கடலைப் பிண்ணாக்கு மற்றும் 84 பாகங்கள் பார்லி அல்லது மக்காச்சோள தானியங்கள் மற்றும் பசும் அல்லது உலர் தீவனப் பயிர் அடங்கியதாகும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: லட்சங்களை குவிக்கலாம் ஈசியா! ஒரே இடத்தில் நெல் சாகுபடி, ஆடு, கோழி, மீன் வளர்ப்பு பயிற்சி.! இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு.
Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!