குட்டி பெறும் காலத்தில் பெட்டை ஆடுகளுக்கு இந்தமாதிரி தீவனங்களைதான் கொடுக்கணும்…

Asianet News Tamil  
Published : Oct 11, 2017, 11:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
குட்டி பெறும் காலத்தில் பெட்டை ஆடுகளுக்கு இந்தமாதிரி தீவனங்களைதான் கொடுக்கணும்…

சுருக்கம்

In the time of the baby arrival the pet will give such sheep to the sheep.

** குட்டி பெறும் காலம் நெருங்கும் தருவாயில், தீவனத்தில் தானியங்களின் அளவை வெகுவாகக் குறைத்து, நல்ல தரமான உலர்புல் தீவனத்தை போதுமான அளவு அளித்தல் வேண்டும்.

** குட்டி ஈன்ற பின், பெட்டைகளின் தீவன அளவைப் படிப்படியாக அதிகரித்து, தீவனமளிப்பதை ஒரு நாளைக்கு ஆறிலிருந்து ஏழு முறையாகப் பிரித்து, அதன் மூலம் தேவையான முழுத் தீவனத்தை யும் அடையுமாறு செய்ய வேண்டும்.

** பொதுவாக, எளிதில் செரிக்கக்கூடிய தீவன மூலம் பொருட்களை கன்று ஈன்ற முதல் சில நாட்களிலேயே தீவனத்தில் சேர்க்க வேண்டும்.

** கோதுமைத் தவிடு மற்றும் பார்லி அல்லது ஓட்ஸ் அல்லது மக்காச் சோளம் 1:1 என்ற விகிதத்தில் சேர்த்தல் நல்லது.

** குட்டி ஈன்ற உடனேயே, பெட்டை ஆட்டிற்குப் போதிய அளவு மிதமான வெந்நீர் அளிக்க வேண்டும்.

** முதல் கட்டி ஈன்ற  பொழுதே, குட்டிகளுக்கான ஆரம்ப காலத் தீவனத்தை கணக்கிடத் துவங்கி விட வேண்டும்.

** ஒரு நிறைவான ஆரம்ப காலத் தீவனமென்பது, 16 பாகங்கள் வேர்க்கடலைப் பிண்ணாக்கு மற்றும் 84 பாகங்கள் பார்லி அல்லது மக்காச்சோள தானியங்கள் மற்றும் பசும் அல்லது உலர் தீவனப் பயிர் அடங்கியதாகும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!