சினைக் காலத்தின் இறுதியில் பெட்டை ஆடுகளின் தீவனப் பராமரிப்பு இதோ…

Asianet News Tamil  
Published : Oct 11, 2017, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
சினைக் காலத்தின் இறுதியில் பெட்டை ஆடுகளின் தீவனப் பராமரிப்பு இதோ…

சுருக்கம்

Here is the feeding of the goat goats at the end of the age ..

** பெட்டைகளை அறுவடைக்குப் பின் உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பலாம். பசும்புல் ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 5 கிலோ என்ற விகிதத்தில் தீவனத்துடன் சேர்க்கப்பட வேண்டும்.

** சினைக் காலத்தின் இறுதி ஒரு மாதத்தின் போது, கருப்பையில் கருவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். தீவனத்தில் போதிய எரிசக்தி இல்லாவிடில், பெட்டைகள் சினைப்பருவ நச்சேற்றத்தினால் பாதிக்கப்படும்.

** கரும்புச் சர்க்கரை பாகு அல்லது தானியங்கள் (பார்லி, மக்காச்சோளம், ஓட்ஸ்) ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 225 கிராம் என்ற அளவில் வழங்கப்பட வேண்டும்.

** மேலும், பெட்டைகளுக்கு ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 7 கிலோ பசும்புல் அளிக்கப்பட வேண்டும்.

** சினைக் காலத்தின் இறுதி 45 நாட்களுக்கும், 600 கிராம் தரமான பயிறு வகை உலர்புல் அல்லது 12லிருந்து 14 சதவிகிதம் செரிமான கச்சா புரதம் மற்றும் 65-லிருந்து 70 சதவிகிதம் மொத்த செரிமான சத்தடங்கிய அடர் தீவனம் 300 கிராமும் அளிக்கப்பட வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

விவசாயிகளுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம்.?! வேளாண்துறைக்கு அள்ளிக் கொடுக்க போகும் தமிழக அரசு.! யாருக்கும் தெரியாத பட்ஜெட் சீக்ரெட்.!
Terrace Garden : மாடித்தோட்டத்தில் எளிதாக வளர்க்கக்கூடிய 5 காய்கறிகள்!