சப்போட்டாவை பழுக்க வைப்பது எப்படி?

 
Published : Oct 25, 2016, 04:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
சப்போட்டாவை பழுக்க வைப்பது எப்படி?

சுருக்கம்

சப்போட்டா பழங்கள் பூத்ததிலிருந்து 4-5 மாதங்களில் அறுவடைக்கு வரும் சப்போட்டாவின் காய்கள் முதிர்ச்சி அடைந்ததை அறிந்து கொள்ள தோலில் எந்த மாற்றங்களும் ஏற்படுவதில்லை.

முதிர்ச்சி அடைந்த காய்கள் ஓரிரு மாற்றங்களைக் கொண்டு முதிர்ச்சி அடைந்த நிலை எனக் கண்டறிந்து பறிக்கப்படுவது பழக்கத்தில் உள்ளது.
சப்போட்டா பறித்தவுடன் பழமாக உண்ணும் நிலையில் இருப்பதில்லை.

காலை நேரத்தில் சப்போட்டா காய்களில் அதிகமாகப் பால் இருப்பதால் (Latex) பிற்பகலில் பறித்து பழுக்க வைப்பது சிறந்தது. பறித்தவுடன் காய்களின் காம்பிலிருந்து பால் வடியும்.

காய்களை அதிகப்பாலுடன் பழுக்க வைத்தால் சரிவர பழுக்காமல் சேதமேற்படும்.

ஆகவே பறித்த காய்களை சாக்குபடுதாவின் மேல் பரப்பி இளம் வெயிலில் அரைமணி நேரம் வைத்தால் காய்களில் உள்ள பால் குறைந்து விடும்.

சிறிதளவு காயவைத்த காய்களை வைக்கோல் பரப்பிய மூங்கில் கூடைகளில் அடுக்கி கூடையின் மேல் பகுதியை மூங்கில்தட்டி அல்லது சாக்குப்பை பயன்படுத்தி இருக்கமாக மூடிவிடவேண்டும்.

கூடையிலுள்ள காய்கள் 3-4 தினங்களில் பழுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடிய பழமாக இருக்கும் சப்போட்டா பழுத்தபின் ஓரிரு நாட்களே உண்பதற்கான நிலையில் இருக்கும்.

பிறகு சுவை குன்றி அழுகி விடும். பழுத்த பழங்களை குளிர்சாதனை அறைகளில் 0 டிகிரி சென்டி கிரேடு முதல் 1.7 டிகிரி உள்ள சீதோஷ்ண நிலையில் 2 முதல் 4 வாரம் வரை நல்ல முறையில் வைத்திருந்து விற்பனை செய்ய முடியும்.

 

PREV
click me!

Recommended Stories

Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
Training For Farmer: லட்சங்களில் வருமானம் தரும் தக்காளி சாஸ், ஜாம் உற்பத்தி! தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க