வான்கோழிகளில் இயற்கை முறையில் இனப்பெருக்கத்தை மேற்கொள்வது எப்படி?

Asianet News Tamil  
Published : Feb 19, 2018, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
வான்கோழிகளில் இயற்கை முறையில் இனப்பெருக்கத்தை மேற்கொள்வது எப்படி?

சுருக்கம்

How to make natural fertility in turkeys

வான்கோழிகளில் இயற்கை முறையில் இனப்பெருக்கம்

** வான்கோழிச் சேவல், பெட்டையுடன் சேரும் போது அதன் இறகுகளை பரப்பிஅடிக்கடி ஒரு வித்தியாசமான ஒலி எழுப்பும். 

** இயற்கையான முறையில்இனப்பெருக்கம் செய்வதற்கு நடுத்தர வான்கோழிகளின் ஐந்து பெட்டைகளுக்கு ஒரு சேவல் வீதமும், பெரிய வான்கோழி இனங்களுக்கு மூன்று பெட்டைகளுக்கு ஒரு சேவல் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். 

** ஒரு வளர்ந்த பெட்டை வான்கோழியிடமிருந்து சராசரியாக 40 முதல் 50குஞ்சுகள் வரை உற்பத்தியை எதிர்பார்க்கலாம். 

** ஒரு வருடத்திற்க்கு மேற்பட்ட வான்கோழி சேவல்களை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவற்றின் விந்துக்களின் கருவூட்டும் திறன் குறைவாக இருக்கும். 

** பொதுவாக ஒரு சேவலை மட்டும் பெட்டை வான்கோழிகளுடன் நீண்ட நாட்களுக்கு இனவிருத்திக்கு வைத்திருந்தால், அது ஒரு குறிப்பிட்ட பெட்டையிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்துவிடும். 

** இதனைத் தவிர்க்க இனவிருத்திக்கு பயன்படும் சேவலை பதினைந்து நாட்களுக்கொரு முறைமாற்ற வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Training: காய்கறி, பழங்கள் ஏற்றுமதி மூலம் லட்சங்களில் வருமானம்.! அரசு வழங்கும் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி.! தேதிய மறந்துடாதீங்க.!
Agriculture: சீமான் சொல்ற மாதிரி மாடு மேய்க்குறது இனி 'ஹைடெக்' வேலை! அசத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பம்!