குதிரைவாலி சாகுபடிக்கு ஏற்ற ரகங்களில் நீர் பாசனம் செய்வது எப்படி?

Asianet News Tamil  
Published : Jul 26, 2017, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
குதிரைவாலி சாகுபடிக்கு ஏற்ற ரகங்களில் நீர் பாசனம் செய்வது எப்படி?

சுருக்கம்

How to irrigate varieties suitable for kuthiraivali farming?

இரகங்கள்:

கோ 1, கோ(குதிரைவாலி)2 ஆகிய இரகங்கள் உள்ளன. 

ஏற்ற பருவம்:

மானாவாரியாக பயிரிட செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் ஏற்றது. பாசனப்பயிராக பயிரிட பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும். 

ஏற்ற மண்:

குதிரைவாலி தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுகையில் ஒரளவிற்கு வளரக்கூடியது. இது மணல் கலந்த களிமண் நிலங்களில் நன்கு வளரக்கூடியது. கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

நிலத்தை தயார்படுத்துதல்:

கோடையில் நிலத்தை 2 முறை கலப்பையை கொண்டு உழுது பக்குவப்படுத்தி கொள்ளவேண்டும்.

கடைசி உழவின் போது தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

பாசனபயிராக இருந்தால் தேவையான அளவில் பார்கள் அமைக்க வேண்டும்.

விதையளவு:

ஒரு எக்டருக்கு 8-10 கிலோ விதைகள் தேவைப்படும். 

விதைத்தல்:

விதைகளை தெளித்தல் (அ) தயார் செய்துள்ள பாரில் 3-4 செ.மீ துளையிட்டு விதைக்கலாம். விதைக்கும் போது வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீ விட வேண்டும்

நீர் நிர்வாகம்:

பொதுவாக குதிரைவாலிக்கு நீர்பாசனம் தேவையில்லை. வறண்ட சூழ்நிலை நிலவினால் பூங்கொத்து வரும் தருணத்தில் ஒருமுறை நீர்பாசனம் அளிக்கவேண்டும்.

அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்றவேண்டும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!