கால்நடைகளுக்கு மர மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களை எப்படி கொடுக்கணும்?

 
Published : Mar 03, 2018, 01:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
கால்நடைகளுக்கு மர மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களை எப்படி கொடுக்கணும்?

சுருக்கம்

How to give these feeds to livestock

 

1.. மர வகை

அகத்தி,  சூபாபுல் ( சவுண்டல் ), கிளிரிச்சிடியா, கருவேல், வெல்வேல், ஆச்சா மற்றும் வேம்பு, நடுத்தரமான புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.

அளிக்கும் முறை

பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை 1 பங்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அளிக்கும்போது கால்நடைகளுக்கு புரதம் மற்றும் மாவு சத்துகள் சரியான விகிதத்தில் கிடைக்கும்.

2.. தீவன தட்டை பயிறு - Fodder Cowpea

புரத சத்து அதிகமுள்ள தீவன பயிர், 

30 - 60 நாட்களில் அறுவடை செய்யலாம்.

இலைகள் உதிரும் அளவு மிகவும் குறைவு.

உலர் தீவனம் தயாரிக்க உகந்தது.

ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.

பசுந்தீவனமளிக்கும் முறை

கறவை மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 15-25 கிலோ பசுந்தீவனம் அளிக்கலாம். அதில் மூன்றில் இரண்டு பங்கு தானிய மற்றும் புல்வகை பசுந்தீவனமாகவும் மீதமுள்ள ஒரு பங்கு பயறு வகை மற்றும் மர இலைகளாகவும் இருக்க வேண்டும்.

பசுந்தீவங்களை 2 அங்குல அளவிற்கு துண்டுகளாக நறுக்கிப் போடுவது சிறந்தது. துண்டுகளின் அளவு 2 அங்குலத்திற்கு கீழ் குறைந்தால் பாலில் கொழுப்புச்சத்து குறையும்.

PREV
click me!

Recommended Stories

Business: மாதத்திற்கு ரூ.50,000 வருமானம் ஈட்டலாம் ஈசியா! லாபத்தை அள்ளித்தரும் கீரை சாகுபடி.!
Egg Price: இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!