சொத்து விஷயத்தில் அபிராமி வைத்த ட்விஸ்டால் கார்த்திக்கு அடித்த ஜாக்பாட் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆளாளுக்கு ஒரு பக்கம் வீட்டை நம்ம பேருக்கு வாங்கிட வேண்டும் என்று யோசித்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆளாளுக்கு ஒரு பக்கம் வீட்டை நம்ம பேருக்கு வாங்கிட வேண்டும் என்று யோசித்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அபிராமி லாயரை வீட்டிற்கு வர வைத்து அவரையும் அருணாச்சலத்தையும் தனியாக அழைத்து சென்று ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல, அருணாச்சலம் அதிர்ச்சி அடைகிறார். இது மட்டும் நம்ம புள்ளைங்களுக்கு தெரிந்தா என்ன நடக்கும் என்று அதிர்கிறார்.
Zee Tamil Karthigai deepam serial
பிறகு அபிராமி லாயரை வரவைத்து பேசிய விஷயத்தை சொல்ல, ஐஸ்வர்யா, ஆனந்த் ஆகியோர் வீடு வேண்டும் என்று கேட்கின்றனர். கார்த்திக் அம்மா என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான், ஆனால் அம்மாவும் அப்பாவும் என்கூட இருக்கனும் என்று சொல்கிறான். மறுநாள் லாயர் வந்து டாக்குமென்டுகளை கொடுக்க, அபிராமியும் அருணாச்சலமும் கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர். லாயர் சொத்துக்கள் அனைத்தும் கார்த்தி பெயருக்கு எழுதி இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதையும் படியுங்கள்... Meena: எனக்கு மீனா தான் வேண்டும்! அடம்பிடித்த 63 வயது நடிகரை அசிங்கப்படுத்தினாரா கண்ணழகி? கொதிக்கும் ரசிகர்கள்
Karthigai deepam serial Update
ஆனந்த் என்னம்மா எல்லாத்தையும் இவனுக்கு எழுதி கொடுத்துட்டீங்க என்று கேட்க, நான் உனக்கு ஒரு பொண்ணை கட்டி வச்சா நீ இன்னொருத்தியை கல்யாணம் பன்னிட்டு வந்து நிற்கிற, நீ அவ பேச்சை கேட்டுட்டு சொத்துக்களை அவ பேருக்கு மாத்தி எழுத மாட்டேன்னு என்ன நிச்சயம் என்று பதிலடி கொடுக்கிறாள்.
அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா அப்போ எங்களுக்கு ஏன் எழுதி வைக்கல என்று கேட்க, அருணுக்கு இன்னும் பொறுப்பு வரல, அதை நான் ரிசார்ட் விஷயத்திலேயே பார்த்துட்டேன். நீ என்னை கொல்ல பிளான் போட்டது, தீபாவை வெளியே துரத்த பிளான் போட்டது என எல்லாமே எனக்கு தெரியும். அருண் எப்போ சுயமா சிந்தித்து பொறுப்பா இருக்கானோ அப்போ எனக்கு சொத்தை கொடுக்க தெரியும் என்று பதிலடி கொடுக்கிறாள்.
Karthigai deepam serial Today Episode
ஆனந்த் நான், அப்பா, அருண் என மூணு பேரும் மில்லுல இரவும் பகலுமா உழைச்சதுனால தான் இவன் வெளிநாட்டுல படிச்சு ஏசில உட்கார்ந்து வேலை பார்க்க முடியுது, ஒரு மாசம் அவனை மில்லுல வேலை பார்க்க சொல்லுங்க பார்க்கலாம் என்று சொல்ல, கார்த்திக் சவாலை ஏற்று கொள்கிறான். நீ சொல்ற மாதிரி நான் வேலை பார்க்குறேன். ஆனால் அதுக்கப்புறம் சொத்தை பிரிக்கிறது பத்தி பேசவே கூடாது என்று செக்மேட் வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... வச்சு செய்யணும்... கொச்சையாக கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த கூல் ரிப்ளை