சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்.. பேரிக்கேட்டில் பசு மாட்டின் தலை மாட்டியது.. போராடி மீட்ட மக்கள்..
சென்னை அருகே பேரிக்கேட்டில் பசு மாட்டின் தலை மாட்டி கொண்டிருந்ததை பார்த்த ஆட்டோ ஓட்டுனர்கள் நீண்ட நேரத்துக்கு பிறகு மீட்டனர்.
சென்னை மாவட்டம், பரங்கிமலை இரயில் நிலையம் அருகில், போலீஸ் பேரிக்கேட்டில் பசு மாட்டின் தலை மாட்டி கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டு காப்பாற்ற முயன்ற போது மாடு தெறித்து ஓடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிறகு நீண்ட நேரத்துக்கு பிறகு மாட்டை மீட்டனர்.