மதுரையில் பெய்த கனமழை.. மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி..
மதுரையில் பெய்த கனமழை காரணமாக மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்தது சில பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை மாநகர் TVS நகர் துரைசாமி சாலை பகுதியில் வசித்து வந்த முருகேசன்(50) , மனைவி பாப்பாத்தி(44) தம்பதியினர் பலசரக் கடை நடத்தி வரும் நிலையில் கடையை அடைத்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சென்ற பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்த காரணமாக மின்சாரம் வயர் அறுந்து தொங்கியது படி இருந்துள்ளது.
இதனை கவனிக்காத நிலையில் பைக்கில் சென்றபோது கணவன் மனைவி இருவர் மீது மின்சார வயர் பட்டதில் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் பெய்த மழை காரணமாக மின்சார கம்பி்அறுந்து விழுந்ததில் மின்சாரம்தாக்கி கணவன். மனைவியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.