ஐஸ் கட்டியை வளைக்கும்போது அல்லது சீரற்ற முறையில் உருமாற்றும்போது, அது மின்சாரத்தை உருவாக்குகிறது என ICN2 மற்றும் பிற பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஐஸ் ஒரு ஃப்ளெக்ஸோஎலக்ட்ரிக் (flexoelectric) பொருள். அதாவது, அதன் மீது மெக்கானிக்கல் அழுத்தம் கொடுக்கப்படும்போது, அது மின்சாரத்தை உருவாக்கும். இது ஒரு புதிய கண்டுபிடிப்பாகும்.
0°C வரை உள்ள அனைத்து வெப்பநிலையிலும் ஐஸ் மின்சாரத்தை உருவாக்க முடியும். குறிப்பாக -113°C-க்குக் கீழே சிறப்பு மின் பண்புகளைக் கொண்டுள்ளது என்கிறார் ICN2-ஐ சேர்ந்த டாக்டர் ஷின் வென்.
ஐஸ் கட்டியின் மேற்பரப்பு, மின்சாரத்தை திருப்பக்கூடிய காந்தம் போல செயல்படும்.இது ஃப்ளெக்ஸோ எலக்ட்ரிசிட்டி,ஃபெரோஎலக்ட்ரிசிட்டி என இரண்டு வழிகளில் மின்சார உருவாக்குவதைக் காட்டுகிறது.
ஐஸ், தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சில மேம்பட்ட பொருட்களைப் போலவே செயல்படுகிறது. உதாரணமாக, சென்சார்கள் மற்றும் கெப்பாசிட்டர்களில் காணப்படும் டைட்டானியம் டை ஆக்சைடு போல.
இந்தக் கண்டுபிடிப்பு, இடிமழையின் போது ஐஸ் துகள்கள் எப்படி மின்சாரம் பெறுகின்றன என்பதை விளக்கக்கூடும். இதுவே மின்னல் தாக்குதல்களுக்கு வழிவகுக்கிறது.
மின்சாரம் ஏற்றப்பட்ட ஐஸ் துகள்கள் மோதி, மின் ஆற்றலை உருவாக்கும்போது மின்னல் உருவாகிறது. இந்த மின் ஏற்ற செயல்முறைக்கு ஃப்ளெக்ஸோஎலக்ட்ரிசிட்டி முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஐஸ் கட்டியை வளைப்பதன் மூலம் உருவாகும் மின் ஆற்றலை அளவிட்டு, இது புயல் மேகங்களில் ஐஸ் துகள்கள் மோதும்போது ஏற்படும் விளைவுகளுடன் பொருந்துகிறது என்கிறார் பேராசிரியர் குஸ்டாவ்.
ஐஸ் கட்டியின் ஃப்ளெக்ஸோஎலக்ட்ரிசிட்டி, குளிர் பிரதேசங்களில் வேலை செய்யக்கூடிய புதிய எலக்ட்ரானிக் கருவிகளை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும்.
இந்தக் கண்டுபிடிப்பு, இயற்கையின் அதிசயங்களையும் எதிர்கால தொழில்நுட்ப சாத்தியங்களையும் இணைத்து, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வானிலை ஆராய்ச்சிக்கு அற்புதமான புதிய வழிகளைத் திறக்கிறது.
மேலும் படிக்க: Phys.org. இந்த ஆய்வு Nature Physics இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மொபைலில் டெலிட் ஆன போட்டோவை திரும்பப் பெறுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!
போன் தொலைஞ்சு போச்சா? கூகுள் மேப்ஸ் போதும்! உடனே கண்டுபிடிக்கலாம்
Google Maps: போன் தொலைஞ்சு போச்சா? கூகுள் மேப்ஸ்ல் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
Smartphone Battery: உங்கள் போன் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் ஐடியா.. தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீர்கள்!