spiritual

திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் இன்று காலை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

சுந்தரேஸ்வரர்

புதிய வஸ்திரம் அணிந்தவாறு திருமணக் கோலத்தில் சுந்தரேஸ்வரர்.

மீனாட்சி அம்மன்

பட்டு கட்டி திருமணக் கோலத்தில் மீனாட்சி அம்மன்.

திருமண கோலத்தில்

திருக்கல்யாணம் முடிந்த பின் அம்மனும் சுவாமியும் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளினர்.

பக்தர்கள் கூட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

திருமண மண்டபம்

பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த மீனாட்சி திருக்கல்யாணம் வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தாலி

கழுத்தில் தாலி அணிந்தவாறு மதுரை மீனாட்சி அம்மன்.

புது தாலி மாற்றுதல்

திருமண நிகழ்ச்சியை காண வந்த மணமான பெண்கள் தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புது தாலி அணிந்து கொண்டனர்.
 

தீர்க்க சுமங்கலி

தாலி மாற்றுவதன் மூலம் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அன்னை மீனாட்சி அருள்வாள் என்பது நம்பிக்கை.

திருக்கல்யாணக் கோலத்தில்

இன்று நாள் முழுவதும் பழைய கல்யாண மண்டபத்தில் சுவாமியும் அம்மனும் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி அளிப்பர்.

Find Next One