தெலுங்கு சினிமா மூலம், திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா.
1992-ஆம் ஆண்டு இவர் நடித்த, 'Aa Okkati Adakku' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
1993-ஆம் ஆண்டு 'உழவன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் தமிழில் முன்னணி நடிகையாக மாற்றியது.
நடிகர் விஜய், அஜித், கார்த்திக், முரளி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பின்னர் இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.
75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள, ரம்பா திருமண வயதை நெருங்கியதும் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இந்த தம்பதிகளுக்கு தற்போது 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. பிள்ளைகள் நன்கு வளர்ந்து விட்டதால், மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அவ்வப்போது சில யுடியூப் தளங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் ரம்பா தன்னுடைய நிறைவேறாதா ஆசை பற்றி கூறியுள்ளார்.
ரம்பாவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே திருமணத்திற்கு பின்னர் 5 குழந்தைகள் பெற்று கொள்ள ஆசைபட்டாராம்.
ஆனால் 3 குழந்தைகளும் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதால், மருத்துவர் அறிவுரைப்படி 3 குழந்தைகள் போதும் என நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்.