விமானத்தில் அழுத குழந்தை! இடையூறாக இருப்பதாக புகார் தெரிவித்த பயணி!

Published : Jun 10, 2025, 09:38 PM IST
Delta Airlines

சுருக்கம்

விமானத்தில் தொடர்ந்து அழுத குழந்தையால் இடையூறு ஏற்படுவதாக அமெரிக்க பயணி புகார் கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

USA Passenger Complains About Baby Crying on Flight: அமெரிக்காவில் விமானத்தில் குழந்தை அழுவதை பார்த்து எரிச்சலடைந்த ஒரு பயணி புகார் கொடுத்துள்ளார். பார்ஸ்டூல் விளையாட்டு பங்களிப்பாளரான பாட் மெக்அலிஃப் என்பவர் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது ஒரு குழந்தை நீண்ட நேரம் அழுதுள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த பாட் மெக்அலிஃப் அந்த விமானத்தில் அழும் குழந்தையை எப்படி அமைதிப்படுத்தியிருக்க வேண்டும்? என்பது குறித்து ஒரு லைவ் வீடியோ வெளியிட்டார்.

விமானத்தில் குழந்தையின் அழுகையால் எரிச்சலடைந்த பயணி

வீடியோவின் பின்னணியில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. தொடர்ந்து வீடியோவை வெளியிட்டு பாட் மெக்அலிஃப் வெளியிட்ட பதிவில், ''உங்கள் குழந்தை விமானத்தில் கத்திக் கொண்டிருந்தால் அதை ஒரு ஃபோன் மூலம் காட்டுங்கள். பெற்றோருக்கு நான் வருத்தப்படுகிறேன். ஆனால் குழந்தையின் அழுகையை நிறுத்த ஒரு கட்டத்தில் நீங்கள் புதிதாக ஏதாவது முயற்சிக்க வேண்டும். அந்த குழந்தையை தூக்கி மேலும் கீழும் செல்லுங்கள். குழந்தையை திசை திருப்புங்கள். குழந்தை அழுகையை நிறுத்தும் என வெறுமென இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்றார்.

நெட்டிசன்கள் விமர்சனம்

பாட் மெக்அலிஃப்பின் இந்த கருத்து இணையத்தில் எதிர்வினையை தூண்டியது. நெட்டிசன்கள் பதிவுகளுக்கு விரைவாக பதிலளித்தனர். "நீங்கள் குழந்தையை விட சத்தமாக அழுவது போல் எனக்கு தெரிகிறது" என்று ஒரு நெட்டிசன் குறிப்பிட்டார். "மூன்று குழந்தைகளின் பெற்றோராக, உங்கள் ஹெட்ஃபோன்களை போட்டுக் கொண்டு விமான பயணத்தை அனுபவியுங்கள்'' என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்தார்.

அதிக மன அழுத்தத்தில் உள்ளனர்

"நீங்கள் காது குலுக்கிக் கொண்டு தனியாக பறப்பதை விட பெற்றோர் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர் என்பதை நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்'' என்று ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், சிலர் விமானத்தில் இருந்த பெற்றோர்கள் விமானத்தில் அழும் தங்கள் குழந்தையை ஆறுதல்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறினர்.

ஒரு பொறுப்பான பெற்றோர் இதை செய்திருக்க வேண்டும்

"நான் ஒப்புக்கொள்கிறேன். இது பெற்றோரின் தவறு. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், விமானத்தில் எங்கள் குழந்தைகளை மகிழ்விக்க முடியும்" என்று ஒரு பயனர் கூறினார். "ஒரு பொறுப்பான பெற்றோர் விமானம் புறப்படுவதற்கு முன்பு ஒரு குழந்தை மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, ஒரு குழந்தையை விமானத்தில் பறக்க வசதியாக மாற்றுவதற்கான உதவிக்குறிப்புகளைப் பெறுவார்கள்" என்று மற்றொருவர் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு